Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி நடக்கிறதா?: உண்மையை சொன்ன காஜல்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி தான் நடக்கிறதா என்பதற்கு பதில் அளித்துள்ளார் காஜல்.
வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றவர் நடிகை காஜல் பசுபதி. அவர் காயத்ரி போன்று அடாவடி செய்வார் என்று எதிர்பார்த்தால் அமைதியாக இருந்துவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை எலிமினேட் செய்யப்பட்டார் காஜல்.
ஸ்க்ரிப்ட்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி நடக்கிறது என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நீங்கள் நினைப்பது போன்று ஸ்க்ரிப்ட் படி நடக்கவில்லை என்று காஜல் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் நான் யாருக்கு பதிலாகவும் இல்லை. நான் நானாகவே இருந்தேன். ஒரு நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக என்னால் போலியாக இருக்க முடியாது என்கிறார் காஜல்.
மக்கள்
நான் யாராக இருக்கிறேனோ அதற்காக மக்கள் என்னை விரும்பினாலே போதும். உங்களின் அன்புக்கு நன்றி. சினேகனை தான் குறி வைத்தேன். ஆனால் அவர் தந்திரமானவர் என்று காஜல் தெரிவித்துள்ளார்.
சினேகன்
சினேகன் எப்பொழுதுமே முதுகிற்கு பின்னால் தான் பேசுவார், புறம் பேசுவார். மக்களின் முகத்திற்கு முன்னால் பேசும் தைரியம் அவருக்கு இல்லை. அதான் தப்பிச்சுட்டான் என்று காஜல் கூறியுள்ளார்.