Don't Miss!
- Sports என்னங்க இது.. அநியாயத்துக்கு பேட்டிங் ஆர்டரை மாற்றும் டெல்லி கேபிடல்ஸ்.. புலம்பும் ரசிகர்கள்
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்ன சொல்றீங்க...பிக்பாஸ் வீட்டில் போன் யூஸ் பண்றாங்களா... அன்சீனால் கிளம்பிய சர்ச்சை
சென்னை : பிக்பாஸ் என்றாலே பரபரப்பு, சர்ச்சை, எதிர்ப்பு என ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. அதிலும் தற்போது நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 5 துவங்குவதற்கு முன்பிருந்தே பல சர்ச்சைகள், சந்தேகங்களை கிளப்பி வருகிறது. இந்த முறை பெரிய அளவில் அறிமுகம் இல்லாத பல முகங்களே போட்டியாளர்களாக சென்றுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர்களுக்கான தனிமைப்படுத்துதல் துவங்கி, போட்டியாளர்கள் அறிமுகமாகும் வரை பயங்கர சஸ்பென்ஸ் வைக்கப்பட்டது. போட்டியாளர்கள் என கன்ஃபார்ம் செய்யப்பட்ட பலரும் தனிமையில் இருக்க வேண்டிய ஒரு வார காலத்திற்குள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது, அவர்களின் ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் வெளியானது என அனைத்தும் சந்தேகத்தை கிளப்பின.
பரபரப்பை கிளப்பி பாதியில் வெளியேறிய பிரபலங்கள்... பிக்பாஸ் ஓர் சுவாரஸ்ய அலசல்
விடாமல் ட்வீட் போடும் அபிஷேக்
அதிலும் யூட்யூப்பரான அபிஷேக் ராஜா, பிக்பாஸ் வீட்டிற்குள் போன பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவர் பேசிய பழைய வீடியோ வெளியாகி வைரலானது. இதனை வைத்து அபிஷேக்கை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். இதோடு ஓயாமல், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகும் அபிஷேக்கின் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து ட்வீட் போஸ்ட் செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் வீட்டிற்குள் இருக்கும் போது எப்படி ட்வீட் போட முடியும் என்ற சந்தேகம் எழுந்தது.
கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்
பிக்பாஸ் வீட்டிற்குள் போன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பினர். இது அபிஷேக்கின் அட்மின் போடும் ட்வீட் என்று சொன்னார்கள். ஆனால் பழைய வீடியோவில் அபிஷேக் பேசிய டயலாக் ட்ரோல் செய்யப்பட்ட அடுத்த நாளே, அதை குறிப்பிட்டு அபிஷேக் பிக்பாஸ் வீட்டிற்குள் பேசியது , அவருக்கு எப்படி சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்தது தெரியும் என அடுத்தடுத்து சந்தேகங்கள் கிளம்பியது.
அன்சீனால் கிளம்பிய பிரச்சனை
அபிஷேக் பற்றிய சந்தேகங்கள் ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்க, நேற்றைய அன்சீன் காட்சிகள் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இதில் இமான் அண்ணாச்சியும், பிரியங்காவும் மொபைல் போனில் பேசுவதாக ஒரு காட்சி சிக்கியது. அப்படியானால் பிக்பாஸ் வீட்டிற்குள் போன் பயன்படுத்தப்படுவது உண்மை தானா என நெட்டிசன்கள் கேட்க துவங்கி விட்டனர்.
போனில் பேசினார்களா
ஆனால் விசாரித்து பார்த்ததில் அவர்கள் போனில் பேசவில்லையாம். மைக்கை தான் போன் போல் வைத்து பேசுவதாக இருவரும் ஃபன் செய்தார்களாம். ஹவுஸ்மெட்களை என்டர்டைன் செய்வதற்காக இருவரும் அப்படி நடித்ததாக கூறப்படுகிறது.
நம்புற மாதிரி இல்லையே
இருந்தாலும் அண்ணாச்சி பேசுவதாக காட்டப்படும் அந்த சீன், அவர் நிஜமாகவே போனை காதில் வைத்து பேசுவது போலவே உள்ளது. இதனால் ரசிகர்கள், ஃபன் செய்த காட்சி என சொல்லும் காரணத்தை ஏற்க மறுத்து, தொடர்ந்து பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
இப்பவே கண்ணகட்டுதே
இதனால் பிக்பாஸ் வட்டாரங்கள், நெட்டிசன்களுக்கு பதில் மற்றம் விளக்கம் சொல்லி இப்போதே டயர்ட் ஆகி விட்டனராம். ஒரு வாரத்திற்கே இப்படி என்றால் இன்னும் 100 நாட்களை எப்படி நாங்கள் சமாளிக்க போகிறோம் என மிரண்டு போய் உள்ளார்களாம்.