Don't Miss!
- News ஆ.ராசா வேட்பு மனு நிறுத்திவைப்பு.. நீலகிரி அதிமுக வேட்பாளருக்கும் சிக்கல்.. எல்.முருகன் மனு ஏற்பு!
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
திருநாள் படத்தின் கதைதான் கிடாரியா? இதுக்குத்தான் இம்புட்டு அலப்பறையா சசிகுமார்?
ஜீவா, நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் திருநாள். வில்லன் சரத் லோகியாலாவிடம் அடியாளாக இருப்பார் ஜீவா. ஒரு கட்டத்தில் சரத்தின் செயல்கள் பிடிக்காமல் போக அவருக்கு எதிராகவே களம் இறங்குவார். இறுதியில் சரத்தை போட்டு தள்ளுவதாக படம் முடியும்.
அடுத்த வாரம் ரிலீஸ் ஆகவிருக்கும் கிடாரி படமும் இதே கதைதான் என்கிறார்கள். ட்ரெய்லரை பார்க்கும்போது நமக்கும் அந்த சந்தேகம் ஏற்படுகிறது. வேல ராமமூர்த்தியிடம் வேலை பார்ப்பவராக சசிகுமார் வருகிறார். ஒரு கட்டத்தில் வேல ராமமூர்த்தியையே எதிர்க்கும் சூழ்நிலை வருகிறது.
இறுதியில் சசியின் அப்பாவாக நெப்போலியன் எண்ட்ரி ஆகிறார்.
இந்த ஒன்லைன் காலம் காலமாக நாம் பார்த்துக்கொண்டிருக்கும் படங்களில் வந்திருக்கிறது என்றாலும் ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஒரே லைனில் வருவதால் எப்படி இந்த குழப்பம் வந்திருக்கும் என கிடாரி படக்குழு தலையை பிய்த்துக்கொள்கிறதாம்.
என்ன பெரிய குழப்பம்.. கதைப் பஞ்சத்துல அடிப்பட்டுப் போய் ஒரே கதையை மாத்தி மாத்தி எடுக்கிறது என்ன புதுசா?