Just In
- 24 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
Don't Miss!
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- News
விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா?
- Sports
அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது?
- Automobiles
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறாரா ராம் ரஹீம் சிங்: உண்மை என்ன?
சன்டிகர்: காமக்கொடுரன் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறதா என்பது தெரிய வந்துள்ளது.
2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள தலித் தலைவர் ஸ்வதேஷ் கிரத் ராம் ரஹீம் சிங் பற்றி கூறியதாவது,

தண்டனை
சிறையில் அடைக்கப்பட்ட ராம் ரஹீம் சிங் தனக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கேட்டதும் மண்டியிட்டு என்னை தூக்கிலிடுங்கள், நான் இனி வாழ விரும்பவில்லை என்று கதறினார்.

தூக்கம்
சிறையில் அடைத்த நாள் அன்று இரவு ராம் ரஹீம் சிங் தூங்கவே இல்லை. கடவுளே நான் என்ன தவறு செய்தேன் என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.

விஐபி
சிறையில் ராம் ரஹீம் சிங்கை பிற கைதிகளை போன்றே நடத்துகிறார்கள். அவருக்கு எந்த சிறப்பு சலுகையும் அளிக்கப்படவில்லை. சக கைதிகள் அவர் மீது கோபத்தில் இருப்பதால் அவரை தனியாக ஒரு இடத்தில் வைத்துள்ளனர்.

கோபம்
ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டதால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கலவரம் வெடித்தது. இது குறித்து அறிந்த கைதிகள் ராம் ரஹீம் சிங் மீது கோபம் அடைந்தனர். அதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி தனி இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்றார் கிரத்.