Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
இளையராஜா–ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவை புக் பண்ண போற டைரக்டர் இவர் தானா?
சென்னை : இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ எந்த படத்தில் இடம்பெற போகிறது என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கையில், டைரக்டர் ஒருவர் தனது அடுத்த படத்தில் இந்த காம்போவை எப்படியாவது புக் செய்ய முயற்சி செய்து வருகிறாராம்.
கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியா முழுவதும் இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு, அதைத் தொடர்ந்து ட்விட்டரில் அவர் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் தான் பேச்சாக உள்ளது. இந்த காம்போ எப்போது, எந்த படத்தில் இணைய உள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.
கைகோர்க்க ஓகே சொன்ன இளையராஜா... ஏ.ஆர்.ரஹ்மான் ரியாக்ஷன் என்னன்னு தெரியுமா ?
இளையராஜா–ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு
துபாயில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு இளையராஜா சென்ற போட்டோவை ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதோடு தங்கள் இசை குழுவுடன் இளையராஜா இசை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அடுத்த நாளே இளையராஜாவும், கோரிக்கையை ஏற்பதாகவும். விரைவில் இசை அமைக்கும் பணி துவங்கும் என்றார். இதை ஏ.ஆர்.ரஹ்மானும் கை தட்டி வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஆர்வம் காட்டும் அமுதன்
இந்த இசை ஜாம்பவான்கள் இணைய போவது உறுதியான தகவல் இசை பிரியர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமாவையே எதிர்பார்க்க வைத்து விட்டது. இந்நிலையில் டைரக்டர் சி.எஸ்.அமுதன், இந்த கூட்டணி இணைவது நிஜமானால் அதை தான் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உங்களால மட்டும் தான் முடியும்
அமுதனின் இந்த ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள டைரக்டர் வெங்கட் பிரபு, அது உங்களால் மட்டும் தான் முடியும் என ட்வீட் செய்துள்ளனர். இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் இணைவதை பற்றி ரசிகர்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், பிரபலங்கள் கூட இதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
யார் இந்த அமுதன்
மெர்சி சிவா நடித்த தமிழ் படம் மூலம் டைரக்டரானவர் அமுதன். தமிழ் படம் 2 ஐயும் இவர் தான் இயக்கினார். தற்போது விஜய் ஆன்டனி நடிக்கும் ரதம் படத்தை இயக்கி வருகிறார். முதல் இரண்டு படங்களை காமெடி படமாக இயக்கிய அமுதன், தற்போது மூன்றாவது படத்தை மிக சீரியசான படமாக இயக்கி வருகிறார். இவர் இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளதால் இவரின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.