ஓ, இந்த காரணத்தால் தான் பிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்யவில்லையா?
ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளதற்கு முக்கிய காரணம் ஒன்று கூறப்படுகிறது.
பாகுபலி படத்தில் நடிக்கும்போது பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் பிரபாஸும், அனுஷ்காவும் அருகருகே அமர்கிறார்கள்.
பொது நிகழ்ச்சிகளில் அனுஷ்கா பிரபாஸை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்.

அனுஷ்கா
அனுஷ்காவும், பிரபாஸும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களின் எதிர்பார்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

காதல்
அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக ஊரே பேசினாலும் அவர்கள் மட்டும் கண்டுகொள்வது இல்லை. அனுஷ்கா வெட்கப்பட்டு சிரிக்கிறார், பிரபாஸ் நைசாக நழுவி விடுகிறார்.

திருமணம்
அனுஷ்காவும் சரி, பிரபாஸும் சரி கெரியரின் பீக்கில் உள்ளனர். இந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டு கெரியரை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லையாம் அவர்கள்.

சாஹோ
அனுஷ்கா, பிரபாஸ் ஜோடி வெற்றி ஜோடியாகிவிட்டது. இந்நிலையில் சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்திலும் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்கிறார்களாம். மேலும் அனுஷ்காவின் பாக்மதி படத்தில் பிரபாஸ் சிறு கதாபாத்திரத்தில் வர உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











