Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெருமாள் பிச்சை மகனை அடக்கப்போவது ஆறுச்'சாமி' இல்லையா?
Recommended Video
சென்னை: சாமி 2 படத்தில் பெருமாள் பிச்சை மகன் ராவண பிச்சையை அடக்கப்போவது ஆறுச்சாமி இல்லை என்று கூறப்படுகிறது.
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் நடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையை(கோட்டா ஸ்ரீனிவாச ராவ்) ஆறுச்சாமி(விக்ரம்) கொன்றுவிடுவார்.
இரண்டாம் பாக செட்டில் பெருமாள் பிச்சையின் 29வது நினைவு நாள் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
பாபி சிம்ஹா
பெருமாள் பிச்சையின் மகன்களாக பாபி சிம்ஹா(ராவண பிச்சை), ஜான் விஜய்(தேவேந்திர பிச்சை), ஓஏகே சுந்தர் (மகேந்திர பிச்சை) ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
விக்ரம்
29வது நினைவு நாள் என்றால் நிச்சயம் ஆறுச்சாமிக்கு வயதாகி ஓய்வு பெற்றிருப்பார். அப்படி என்றால் ஆறுச்சாமியின் மகனான மற்றொரு விக்ரம் தான் பெருமாள் பிச்சையின் மகன்களை சமாளிக்க வேண்டும்.
போலீஸ்
சாமி 2 படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் அப்பா ஆறுச்சாமி மற்றும் மகன் விக்ரம் போல. மகனுக்கு தான் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக இருக்கும்.
மாமி
சாமி 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமான த்ரிஷா பின்னர் விலகிவிட்டார். விக்ரம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டும் அவர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.