Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'விஜய் 60' கேரளாவில் நடந்த ரியல் சம்பவமா?
சில ஆண்டுகளுக்கு முன்னர் அடுத்த கட்டத்துக்கு நகரலாம் என காலடி எடுத்து வைக்க முடிவு செய்தார் விஜய். சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல அரசியலுக்குள் நுழையலாம் என முயன்றபோது ஆட்சியாளர்களை பகைத்துக் கொண்டால் சினிமா கேரியருக்கே ஆபத்து என்பதை சில சம்பவங்களால் உணர்ந்து போன வேகத்திலேயே திரும்பி விட்டார். இனி சினிமா மட்டும் தான் என்று பேட்டி கொடுப்பதை கூட தவிர்த்துவருகிறார்.
அரசியலுக்கு அச்சாரம் போட்டபோது அதற்காக தமிழில் மட்டும்தான் நடிப்பேன் என்று உறுதியாக இருந்தார். ஆனால் இப்போது தனது மார்க்கெட் விரிவடைய வேண்டும் என்பதற்காக பிற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளாராம். தெறி படத்தின் பெரும்பகுதி கேரளாவில் நடப்பது போல அமைக்கப்பட்டது. இப்போது நடித்துக்கொண்டிருக்கும் பரதன் படமும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டதாம். முக்கிய நடிகர்களிலேயே பாதி பேர் மலையாள நடிகர்கள்தான்.
மலையாளத்தின் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தமிழ்நாட்டில் ஓடுவதுபோல மலையாளத்தில் தமிழ் மசாலா படங்கள் சக்கை போடு போடுகின்றன. இதுதான் தளபதியின் மாஸ்டர் ப்ளானுக்கு காரணம்.