Don't Miss!
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
16வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி சீரியலின் சூப்பர்வைசிங் தயாரிப்பாளர் தற்கொலை
Recommended Video
மும்பை: பிரபல தொலைக்காட்சி சீரியலின் தயாரிப்பு மேற்பார்வையாளர் அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான இஷ்க்பாஸின் தயாரிப்பு மேற்பார்வை பணியை கவனித்து வந்தவர் சஞ்சய் பைரகி.
அவர் கடந்த 2ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பம்
சஞ்சய் பைரகி மும்பை மலாத் பகுதியில் உள்ள சிலிகன் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி, 10 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு 16வது மாடியில் இருந்து குதித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
கடிதம்
சஞ்சய் தற்கொலை செய்து கொண்டது அவர் எழுதி வைத்த கடிதம் மூலம் தெரிய வந்தது. பணப் பிரச்சனை இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சஞ்சய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பணம்
இது என் தவறு தான். ஆனால் என் குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனக்கு பணப் பிரச்சனைகள் உள்ளன. இதற்கு யாரும் பொறுப்பு அல்ல என்று சஞ்சய் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
மகிழ்ச்சி
தற்கொலை செய்து கொள்ளும் முன்பு சஞ்சய் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் ஹோலி பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடியுள்ளார். இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சஞ்சய்.
அதிர்ச்சி
சஞ்சய் பற்றி இஷ்க்பாஸ் சீரியலின் தயாரிப்பாளரான குல் கான் கூறியதாவது, சஞ்சய் திறமையானவர். மொத்த தயாரிப்பு வேலையையும் கவனித்து வந்தார். அவரை பிணமாக பார்த்ததை என்னால் நம்ப முடியவில்லை என்றார்.