Don't Miss!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
'அது' நடந்து 1 வருஷமாச்சு ஆனால் மறக்க முடியல: பாலியல் தொல்லை குறித்து நடிகை பேட்டி
மும்பை: பாலியல் தொல்லைக்கு ஆளாகி ஓராண்டு ஆனபோதிலும் அது நேற்று நடந்தது போன்று இன்னும் நினைவில் இருப்பதாக தொலைக்காட்சி நடிகை ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.
பாபிஜி கர் பர் ஹை என்ற பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த ஷில்பா ஷிண்டே அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் சஞ்சய் கோஹ்லி மீது மும்பை போலீசில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தொல்லை
பல பிரச்சனைகள் இருந்தன. சூழலும் சரியில்லை. அதனால் தான் பாலியல் தொல்லை குறித்து முன்பே என்னால் பேச முடியவில்லை. அது நடந்து ஓராண்டு ஆனாலும் நேற்று நடந்தது போன்று நினைவில் உள்ளது.
தயாரிப்பாளர்
தயாரிப்பாளர்கள் அனைவரையும் எனக்கு எதிராக திருப்பிவிட்டனர். அதுவும் போதவில்லை என்று இந்த பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
போலீஸ்காரர்
சஞ்சய் மீது புகார் அளிக்க காவல் நிலையம் சென்றேன். போலீஸ்காரர் என்னை மூன்று நாட்கள் காக்க வைத்து அதன் பிறகே புகாரை ஏற்றுக் கொண்டார்.
உடல்நலம்
என்னிடம் அவர்கள் நடந்து கொண்ட விதத்ததால் என் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடந்த 7 முதல் 8 மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தேன் என்கிறார் ஷில்பா.