கஷ்டமா இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு: நடிகை கண்ணீர்
மும்பை: தனக்கு பிறந்த குழந்தை ஒன்று இறந்துவிட்ட கவலையில் உள்ளார் நடிகை செலினா ஜெட்லி.
பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி, பீட்டர் ஹாக் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான செலினா மறுபடியும் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார்.
அந்த குழந்தைகளுக்கு ஆர்தர், ஷம்ஷேர் என்று பெயர் வைத்தனர். அதில் குழந்தை ஷம்ஷேர் இதயக் கோளாறால் இறந்துவிட்டது.

ஷம்ஷேர்
ஆர்தர் வடிவில் ஷம்ஷேரை பார்ப்பதாக செலினா தெரிவித்துள்ளார். கடவுள் எங்களை வெறும் கையுடன் விடவில்லை. ஆர்தரை கொடுத்துள்ளார் என்கிறார் செலினா.

வேதனை
இரண்டு மாதங்களுக்கு முன்பு என் தந்தை இறந்தார், தற்போது ஷம்ஷேர். இது குறித்து பேசவே ரொம்ப கஷ்டமாக உள்ளது. வலி அதிகம் என்று வேதனைப்படுகிறார் செலினா.

நம்பிக்கை
மீண்டும் கர்ப்பமாக இருந்தபோது செலினா தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பிற கர்ப்பிணிகளுக்கு நம்பிக்கை அளிக்கும்படி போஸ்ட் போட்டிருந்தார்.

நண்பர்கள்
முதலில் தந்தை தற்போது குழந்தையை இழந்து வாடும் செலினாவுக்கு நண்பர்களும், உறவினர்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











