Don't Miss!
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விஜய் படத்தை வெளியிடாமல் தடுத்தது தமிழக அரசுதான்!- சொல்கிறார் ஜெ அன்பழகன்
சென்னை: விஜய்யின் தலைவா படத்தைத் தடுத்தது தமிழக அரசுதான் என்று தயாரிப்பாளர் ஜெ அன்பழகன் தெரிவித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் தயாரான விஜய்யின் தலைவா படம் வெளியாகும் நேரத்தில் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்தது. இதற்குக் காரணம் யார் ? என்ற கேள்விக்கு நேரடியாக எந்த பதிலும் இல்லை. பின்னர் விஜய்யே முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இந்தப் பட பிரச்சினைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி, மாண்புமிகு அம்மா ஆட்சி சிறப்பாக இருப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டார்.
இந்த நிலையில், இந்தப் பிரச்சினை முடிந்து இத்தனை ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தைத் தடுத்ததே தமிழக அரசுதான் என்று தயாரிப்பாளரும் எம்எல்ஏவுமான ஜெ அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று கமலா திரையரங்கில் நடந்த கககபோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஜெ அன்பழகன் பேசுகையில், "இப்போது படங்களை வெளியிடுவதில் பிரச்சனை வருகிறது. சிறுபடங்கள் பெரிய படங்கள் என்ற பாராபட்சமே இதில் இல்லை.
முன்பு விஜய் நடித்த தலைவா திரைப்படத்தை வெளியிடக் கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது, அதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் போகவே, அதை கண்டு வருத்தமுற்ற நான் அதை வாங்கி வெளியிடுகிறேன் என்று அறிவித்தேன். இரவோடு இரவாக அய்யப்பன் 400 திரையங்குகளை புக் செய்தார். அதன் பின்னரே படம் வெளியானது.
இதுபோல நிறைய சின்ன படங்களை வாழ வைத்த ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அவரது மகன் பாரதி அய்யப்பன் சார்பாக மீண்டும் துவங்கபட்டு சிறிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. அவரது தந்தைக்கு என் பூரண ஆசிகள் இருந்தது போன்று இவருக்கும் என் ஆசியும் எப்போதும் உண்டு," என்றார்.