Janhvi Kapoor: அம்மா ஸ்ரீதேவி மறைந்த போது நான் சிரித்தேனா? ஜான்வி கபூர் உருக்கமான பேச்சு!

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தன் தாயை இழந்த வலியை பற்றி சமீபத்தில் உருக்கமாக பேசினார். கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று துபாயில் ஸ்ரீதேவி காலமானார். ஒரு நடிகையின் மகளாக ஜான்வி மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். ஆனால் தாயின் திடீர் மறைவு, ஜான்வி கபூரை மேலும் அதிகப்படுத்தியது.

தாயின் எதிர்பாராத மரணத்திற்குப் பிறகு, பொது இடத்தில் துக்கம் அனுசரிப்பது தனக்கு எவ்வளவு சவாலாக இருந்தது என்பதை ஜான்வி விளக்கினார். ஊடகங்களின் எதிர்பார்ப்புகளால் தான் ஒருவித வலையில் சிக்கியதாக உணர்ந்ததாகவும் கூறியுள்ளார். பட விளம்பரங்களின் போது சிரித்த நான், என அம்மாவின் மரணத்தின் போது அமைதியாக இருந்ததற்கு உணர்ச்சி அற்றவர் என விமர்சிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இது மட்டும் இல்லாமல் அம்மா மறைவுக்குப் பின்னர் நான் எனது படத்தின் புரோமோசனின் போது சிரித்ததற்காகவும் விமர்சிக்கப்பட்டேன்.

Janhvi Kapoor Opens Up on Being Mocked For Smiling After Mother Sridevi s Demise
Photo Credit:

உங்கள் தாயை இழப்பது, நாட்டின் பாதி பேருக்கு ஒரு பொழுதுபோக்கு என்பதை கற்பனை செய்து பாருங்கள், என்று ஜான்வி வருத்தத்துடன் கூறினார். ஜான்வி அவரது டீன் ஏஜில் இருந்தபோது புகைப்படக் கலைஞர்களின் தொடர்ச்சியான கவனம் வேறுவிதமாக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில், பிரபலங்களின் குழந்தைகள் கட்டுப்பாடின்றி புகைப்படம் எடுக்கப்பட்டனர்.

அம்மாவின் மறைவு: மக்கள் என்னை அறிவதற்கு முன்பே, நான் சலுகை பெற்றவளாகவே பார்க்கப்பட்டேன் என்று அவர் பேசியதும் பலரது கவனத்தை ஈர்த்தது. ஸ்ரீதேவியின் மரணம் ஜான்வியின் மீது மக்களின் மீதான பார்வையில் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊடகங்களின் வெளிச்சம் மனித இயல்பு குறித்து தனக்கு ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்த கருத்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, "நாங்கள் அனுபவித்ததை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்," என்று ஜான்வி கூறினார். இந்த இழப்பும், அதன்பின் வந்த வெளிச்சமும், மற்றவர்களிடமிருந்து எந்த ஒரு அனுதாபத்தையும் நீக்கிவிட்டது.

Janhvi Kapoor Opens Up on Being Mocked For Smiling After Mother Sridevi s Demise
Photo Credit:

ஸ்ரீ தேவி: ஸ்ரீதேவி இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்டவர். 54 வயதில் துபாயில் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மறைந்தார். ஜான்வியின் முதல் படமான 'தடக்' வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த மறைவு நிகழ்ந்தது. ஜான்விக்கு மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டிய அவரது சினிமா அறிமுகமானது அவருக்கு சோகத்திற்கு மத்தியில் நிகழ்ந்தது. இன்னும் சொல்லப்போனால், ஜான்வியின் நடிப்பை ரசிகர்கள் எப்படி வரவேற்றார் என்பதை ஸ்ரீதேவி பார்க்க வேண்டும் என்பதை ஜான்வி எவ்வளவு ஆசையாக இருந்திருப்பார் என்று திரையுலகமே பேசிக் கொண்டது.

படங்கள்: ஜான்வி கபூர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'பரம் சுந்தரி' என்ற படம் தான். இந்த படம் நகைச்சுவை மற்றும் காதல் கதையை மையமாக கொண்ட படத்தில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்தார். கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், அவர்களின் ஜோடி ரசிகர்கள் மனதில் கவனம் பெற்றது. தற்போது வருண் தவானுடன் இணைந்து ஷஷாங்க் கைதான் இயக்கும் 'சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி' படத்தில் நடித்து வருகிறார்.பொதுமக்கள் மத்தியில் தனது தாயை இழந்த துயரம், ஜான்வி கபூரின் வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜான்விக்கு இது மனதளவில் மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தினாலும், சினிமா நெருக்கடிகள் மற்றும் தனிப்பட்ட இழப்பையும் சமாளித்து அவர் தொடர்ந்து திரைப்படத் துறையில் முன்னேறி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X