Don't Miss!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இனி என் படங்களில் நடிகர் நடிகைகள் சிரமப்படுத்த மாட்டேன் - ஜெயம் ராஜா
இனி என் படங்களில் நடிகர் நடிகைகளை அதிக சிரமப்படுத்தமாட்டேன், என்றார் இயக்குநர் ஜெயம் ராஜா.
இயக்குனர் ஜெயம் ராஜா முதல் முறையாக நடித்திருக்கும் படம் என்ன சத்தம் இந்த நேரம்.

இந்தப் படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த, ஒரே மாதிரி முகத் தோற்றம் கொண்ட 4 பெண் குழந்தைகள் நடித்திருக்கின்றனர். இந்த குழந்தைகளின் அப்பாவாக ஜெயம் ராஜாவும், அம்மாவாக காதல் மன்னன் புகழ் மானுவும் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் குரு ரமேஷ்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.
ஜெயம் ராஜா பேசுகையில், "என் தந்தை திரைத்துறையில் நீண்ட வருடங்களாக இருப்பவர்.
நான் விரும்பியிருந்தால் எப்போதோ இயக்குநராகியிருப்பேன். ஆனால் எனக்கு அதில் ஆர்வமில்லை. ஆனால் இப்போது இந்தப் படத்தில் நான் நடிக்கக் காரணம், இந்த நான்கு தெய்வங்கள்... குழந்தைகள்தான். இவர்களுக்காகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இயக்குனராக பல படங்களை இயக்கியிருந்தாலும் நடிப்புக்கு நான் புதுசுதான். எனவே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஜெயம் ரவி சொல்லுவான், 'எங்களையெல்லாம் என்ன பாடு படுத்தினே... இப்ப தெரியுதா?' என்று. இனிமேல் நான் இயக்கும் படங்களில் நடிகர், நடிகைகளுக்கு அதிகம் சிரமம் கொடுக்கக் கூடாதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்," என்றார்.