Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மலேசிய கலைவிழாவுக்கு சென்ற இடத்தில் ஜெயம் ரவி, ஆரி மருத்துவமனையில் அனுமதி
Recommended Video
கோலாலம்பூர்: மலேசியாவில் நட்சத்திர கலை விழாவில் கலந்து கொள்ள சென்ற நடிகர்கள் ஜெயம் ரவி, ஆரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலை விழாவை நடத்தியுள்ளனர். கலை நிகழ்ச்சி தவிர்த்து நடிகர்கள் இடையேயான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது.
போட்டிகளில் நடிகர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
அதர்வா
ஆர்யா மற்றும் அதர்வா தலைமையிலான அணிகள் மோதிய கால்பந்தாட்டப் போட்டி நடந்தது. அப்போது அதர்வா அணியை சேர்ந்த நடிகர் ஆரி கோல் போட முயன்றார்.
காயம்
ஆர்யா அணியை சேர்ந்த ஒருவர் ஆரியை தடுக்க முயன்றபோது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஆரி.
ரவி
மருத்துவமனையில் ஆரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது நலமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மலேசியா சென்ற இடத்தில் ஜெயம் ரவிக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
காய்ச்சல்
ஜெயம் ரவிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விழா நடத்த சென்ற இடத்தில் இப்படியாகிவிட்டதே என்று பிரபலங்கள் வருத்தப்பட்டனர்.