Don't Miss!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது மிருதன் குழு!
மிருதன் படத்தின் வெற்றி, அந்தக் குழுவை மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைத்திருக்கிறது.
ஆம், அந்தப் படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஜெயம் ரவி சம்மதித்துள்ளார். இந்தப் படத்துக்கான கதையை ஒரே நாளில் முடிவு செய்துவிட்டாராம் ஜெயம் ரவி.
ஜெயம் ரவி - லட்சுமி மேனன் நடிப்பில் தயாரான மிருதன் படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. தமிழில் தயாரான ரத்தக்காட்டேரி வகைப் படம் இது என்பதால் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
இந்த வரவேற்பைப் பார்த்த அந்தப் படக்குழு மீ்ண்டும் ஒரு புதிய படத்துக்காக இணைகிறது.
இந்தப் புதிய படத்துக்கான கதையைக் கேட்ட ஜெயம் ரவி, ஒரே நாளில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். இந்த முறையும் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய கதையுடன் களமிறங்கப் போகிறார்களாம்.
‘மிருதன்' படத்தில் நடித்த ஜெயம் ரவி இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். சக்தி சௌந்தரராஜன் இயக்கவிருக்கிறார். கதாநாயகி தேடுதல் படலம் நடக்கிறது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.