Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹன்சிகா அவ்ளோ அழகா... எனக்கு பொறாமையா இருக்கு!- ஜெயப்ரதா
முன்னாள் நடிகை, எம்பி ஜெயப்ரதாவும், அரசியலிலிருந்து விலகி நிற்கும் அமர்சிங்கும் இணைந்து தயாரித்துள்ள படம் உயிரே உயிரே. இந்தப் படத்தில் ஜெயப்ரதாவின் மகன் சித்து நாயகனாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில் ஜெயப்ரதா பேசுகையில், "இது என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு படமாக அமையும். எங்களது நிறுவனத்தின் மூலம் பல்வேறு மொழிகளில் நாங்கள் படங்கள் தயாரித்துள்ளோம். ஆனாலும் என் மகனை தமிழில்தான் நாயகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று உறுதியோடு இருந்தேன். காரணம், நான் இன்று இந்த அளவு நிற்க காரணமே தமிழ் ரசிகர்கள்தான்.
‘லெஜண்ட்ரி இயக்குநர் சத்யஜித்ரே' என்னிடம், நடிகைகளிலேயே நான் மிக அழகான பெண் என்று கூறுவார். ஆனால் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேகா ஹன்சிகாவை ‘அழகே அழகே' என வர்ணித்திருக்கிறார். இது எனக்கு சற்று பொறாமையாகத்தானிருந்தது. ஹன்சிகாவின் நடிப்பு இந்தப் படத்தின் மூலம் இன்னும் மெருகேறியுள்ளது," என்றார்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனுப் ரூபன் அறிமுகமாகிறார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர் இவர். அங்கு 50 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துவிட்டார். அவர் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை மேடையில் பாடிக் காட்டினார். அதுமட்டுமல்ல, ஜெயப்ரதாவுடனும் ஒரு பாடலைப் பாடினார்.