Don't Miss!
- News மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை.. ஐசியூவில் திடீர் அட்மிட்.. தற்போது எப்படி இருக்கிறார் மன்சூர்?
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
2 ஆண்டு காதல், 32 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்திய நடிகை ஜெயசுதா, நிதின்
மும்பை: நிதின் கபூரும், நடிகை ஜெயசுதாவும் 2 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
நடிகை ஜெயசுதாவின் கணவரும், தயாரிப்பாளருமான நிதின் கபூர் மும்பையில் உள்ள தனது அலுவலகத்தில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நிதின் பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினர் ஆவார்.
காதல்
ஜெயசுதாவும், நிதின் கபூரும் இரண்டு ஆண்டுகள் காதலித்தனர். அதன் பிறகு கடந்த 1985ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு நிஹார் மற்றும் ஸ்ரேயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஜெயசுதா
முன்னதாக நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெயசுதா கூறுகையில், நிதினை பார்த்த நாளே அவரது அழகு என்னை கவர்ந்தது. அவர் பேசும் விதம் பிடித்திருந்தது. ஆனால் இது கண்டதும் காதல் இல்லை என்றார்.
நிதின்
ஜெயசுதா பற்றி நிதின் முன்பு கூறியதாவது, நானும், அவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களுக்குள் ஸ்பார்க் எல்லாம் இல்லை. ஆனால் நாங்கள் மும்பை மற்றும் சென்னைக்கு இடையே பயணம் செய்யத் துவங்கியபோது தான் ஒருவரையொருவர் மிஸ் செய்ததை உணர்ந்தோம் என்றார்.
மரணம்
நிதின் கபூரின் மரணத்தால் பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிதினை இழந்து வாடும் ஜெயசுதா மற்றும் மகன்களுக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.