Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினியின் 'காலா' படத்திற்கு தடை கோரிய வழக்கு - உரிமையியல் நீதிமன்றம் அதிரடி
சென்னை : 'காலா' படத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.
கபாலி படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும் கேங்ஸ்டர் படம் காலா. மும்பையில் வாழ்ந்த தமிழர் ஒருவரின் வாழ்க்கையைத் தழுவி இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
மூலக்கரு என்னுடையது
இந்நிலையில் ராஜசேகரன் என்பவர், 'காலா' படத்தின் மூலக்கரு மற்றும் தலைப்பு என்னுடையது, ரஜினி நடிக்கும் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பதில் மனு தாக்கல்
இந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், ரஞ்சித் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் 'காலா' படத்தின் கதை யாரிடமிருந்தும் திருடப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.
ஆதாரம் தாக்கல்
இதனையடுத்து மனுதாரர் ராஜசேகரன் நடிகர் ரஜினிந்த் தான் சந்தித்தது தொடர்பான புகைப்படங்களை ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் ரஜினி, ரஞ்சித் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரருக்கு அறிவுறுத்தல்
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்புரிமை சட்டத்தின் கீழ் தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும் என காலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளார்.
காப்பிரைட் விவகாரம் - தள்ளுபடி
மனுதாரர் ராஜசேகரனை, சென்னை ஐகோர்ட்டில் முறையிட அறிவுறுத்தியதுடன் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி இளங்கோவன்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!