நான் அது இல்ல, ஆளே வேற...: சினேகனிடம் உளறும் ஜூலி
சென்னை: நான் அழுகாட்சி பொண்ணு இல்லை நான் ஆளே வேற என்று கூறியுள்ளார் ஜூலியானா.
பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறி ஏற்பாட்டாளர்களின் முகத்தில் சிரிப்பாக உள்ளது.
இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரொமோ வீடியோவில் ஜூலியை தான் காட்டியுள்ளார்கள்.
அழுகாட்சி
வந்த நாளில் இருந்து அழுகாட்சி மூஞ்சியாகவே தான் பார்த்திருப்பீங்க, ஆனால் நான் ஆளே வேற என்று கூறி வில்லித்தனமாக சிரிக்கிறார் ஜூலி. பிக் பாஸ் சொல்லிக் கொடுத்ததை சொல்லி சிரிக்கிறார் ஜூலி.

தலைவி
எத்தனை நாளைக்கு தான் நானும் அழுது பிரண்டே நடிக்கிறது நானும் தலைவியாகலாம் என்று முடிவு செய்துவிட்டேன் என்பது போன்று பேசுகிறார் ஜூலி.

ஜூலி
நெட்டின்சன்கள் அதிகம் வெறுக்கும் வில்லி என்றால் அது ஜூலி தான். எந்த ஜூலியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்களோ தற்போது அதே ஜூலியை அசிங்கமாக திட்டி வருகிறார்கள்.

பிக் பாஸ்
முதலில் ஜூலியை அப்பாவி போன்று காட்டிவிட்டு தற்போது வில்லியாக காட்டுவதும் பிக் பாஸ் தான். அவர் ஸ்கிரிப்ட்டை மாற்றிவிட்டார். நெட்டிசன்களோ ஸ்கிரிப்ட் படி நடிக்கும் ஜூலியை போய் வறுத்தெடுக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











