Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தள்ளிப் போன “ரஜினிமுருகன் “, “மாரி”.... சோலோவாக வரும் “வாலு”
சென்னை: வரும் ரம்ஜான் தினத்தன்று சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் , தனுஷின் மாரி மற்றும் சிம்புவின் வாலு மூன்று படங்களும் மோதுவது உறுதி என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
காத்திருந்தவர்களின் நினைப்பை தவிடுபொடியாக்கி இருக்கிறது தனுஷின் தாராள மனசு, ஆமாம் ஜூலை 17 ம் தேதி போட்டியில் இருந்து பின்வாங்கி இருக்கிறார் தனுஷ். மாரி படம் ஜூலை 17 ல் வெளியாவதற்குப் பதிலாக 24ம் தேதி வெளியாகிறது.
ரஜினிமுருகன் படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை, எனவே தற்போதைய சூழ்நிலையில் சோலோவாக வருகிறது சிம்புவின் வாலு திரைப்படம். தனுஷ் சிம்புவிற்கு உதவி செய்யும் நோக்கத்தில் படத்தைத் தள்ளி வைத்தாரா அல்லது நமது போட்டி சிவகார்த்திகேயனுடன் தான் என்று பின்வாங்கினாரா தெரியவில்லை.
ஒருவேளை சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் கூறியது போல இந்தக் குருபெயர்ச்சி சிம்புவிற்கு நன்மையைத் தந்துள்ளதா, காரணம் எதுவாக இருப்பினும் சோலோவாக வெளிவரும் வாலு நன்றாக ஓடினால் சரிதான்.