சுஜா வருணியிடம் பப்ளிக்காக மன்னிப்பு கேட்ட காஜல்: எதற்கு தெரியுமா?
சென்னை: சுஜா வருணி நடிப்பதாக தவறாக நினைத்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை காஜல் பசுபதி.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒரு டாஸ்க் செய்துபோது சுஜா வருணி காலில் அடிப்பட்டது. அவர் வலியால் துடிக்க பலரும் அவர் போலியாக நடிப்பதாகவே நினைத்தனர்.
இந்நிலையில் அது போலி அல்ல உண்மை என்று நடிகை காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.
காஜல்
நீ நடிக்கிறாய் என்று தான் நானும் நினைத்தேன், சாரி. அது நடிப்பு அல்ல என்று சுஜா வருணி பற்றி காஜல் பசுபதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிப்பு
காஜல் உங்கள் மீது மதிப்பு வைத்துள்ளோம். இது போன்ற புகைப்படங்களை வெளியிடாதீர்கள். அவர் சிம்பதி கிரியேட் செய்ய எது வேண்டுமானாலும் செய்வார் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
வலி
நடந்தது நடந்ததாக இருக்கட்டும். அவர் வலியில் உள்ளார். அவர் போன் செய்து பேசி தனது வலி குறித்து தெரிவித்தார். என் தவறுக்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காஜல் ரசிகரின் கமெண்டுக்கு பதில் அளித்துள்ளார்.
பாவம்
பாவம் தான் என்ன பண்றது..கொஞ்சம் வாயை அடக்கி வச்சிருக்கலாம்


Click it and Unblock the Notifications











