செம்மரக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறதா "கான்"?
சென்னை: ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்று கூறி 20 தமிழர்களை கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு செல்வராகவன் இயக்கி வரும் கான் படம் வளர்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
செம்மரக் கட்டைகள் கடத்தல் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தை மொத்தமாக ஆட்டிப் படைத்த ஒரு விஷயம். செம்மரக் கட்டைகள் கடத்தினார்கள் என்று 20 தமிழர்களை எந்த வித விசாரணையும் இன்றி ஆந்திர காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

நாடையே தீப்பற்ற வைத்த இந்தப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் கான் திரைப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் கசிந்து உள்ளன.
உண்மையில் தீவிரவாதத்தை அடிப்படையாக் கொண்ட இந்தக் கதையில் சில முக்கியமான காட்சிகளை அடர்ந்த வனப்பகுதிகளில் படமாக்க செல்வராகவன் திட்டமிட்டு இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிம்பு இந்தப் படத்தில் ரா (RAW) பிரிவில் வேலை பார்க்கும் அதிகாரியாகவும் அவரின் திட்டங்களை முறியடிக்கும் வேடத்தில் வில்லனாக ஜெகபதி பாபுவும் நடிக்கின்றனர். வேகமாக வளர்ந்து வரும் கான் படத்தில் சிம்புவுடன் இணைந்து டாப்ஸி மற்றும் கேத்தரின் தெரசா இருவரும் முக்கியமான வேடமேற்று நடித்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











