Just In
- 44 min ago
சூப்பர் ஹீரோ ஆரி.. மின்னல் வேகத்துல போறாரே.. எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் பாடல் ரிலீஸ்!
- 1 hr ago
தங்கச்சிலை போல ஜொலிக்கும் துல்கர் சல்மான் பட நடிகை!
- 1 hr ago
பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானாமே..பாலாஜிக்கு அதுவும் இல்லையாம்? தீயாய் பரவும் தகவல்!
- 1 hr ago
தீவிர வில்வித்தை பயிற்சி... ஆண்ட்ரியாவின் அசத்தலான பிக்ஸ்!
Don't Miss!
- News
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... 5 நாட்களில்... 1500 ரூம்கள் கொண்ட மருத்துவமனையை கட்டி அசத்திய சீனா
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Sports
கொரோனா வைரஸ் பாஸிடிவ்.. ஆனாலும் போட்டியில் ஆட சாய்னாவுக்கு அனுமதி.. செம ட்விஸ்ட்!
- Automobiles
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
- Finance
லாக்டவுனில் 4 மடங்கு வளர்ச்சி.. டாடா பங்ககுளை திட்டம்போட்டு வாங்கிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காத்துவாக்குல ரெண்டு காதல்…டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பம் !
சென்னை : காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்தை சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்தார். பின்னர் சில சிக்கல் காரணமாக விஜய்சேதுபதிக்கு கைமாறியது என்பது குறிப்பிடத்தக்கது

நல்ல வரவேற்பு
ரொமான்ஸ்-காமெடி கதைக்களமாக படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த காம்போ மீண்டும் இணையும் நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெற்றிப்படமாக இருக்கும்
நானும் ரௌடி தான் படத்தில் பணியாற்றிய போது தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலர்களாக மாறினர் என்பது அனைவருக்கும் தெரியும். விக்னேஷ் இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா நடிப்பதால் இந்த படமும் நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

படப்பிடிப்பு தொடங்கவில்லை
காத்து வாக்குல ரெண்டு காதல் படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்களுக்கு மேல் ஆகியும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தன. படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டவுடனே கொரோனா லாக்டவுன் தொடங்கியதால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் போது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் கு றையாததால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் போனது.

டிசம்பரில் ஆரம்பம்
தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் இறுதியில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.