Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'ஈழ தேவதை வாழ வாழவே...' - சிவப்பு படத்தில் கபிலன் வைரமுத்து பாடல்!
கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் நவீன் சந்திரா,ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்திருக்கும் படம் சிவப்பு. மது அம்பாட் ஒளிப்பதிவு செய்ய, ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
போரினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைத் தமிழர்களின் நிலையே இப்படத்தின் மையம். ரூபா மஞ்சரி இலங்கைத் தமிழ் பெண்ணாக நடித்திருக்கிறார். இப்படத்தில் 'சடுகுடு விழியில் சுடுகிற மயக்கம்...' என்று கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் பாடலை ஹரிஹரன் பாடியிருக்கிறார். வரும் 16ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடல் வரிகள்...
பல்லவி
சடுகுடு விழியில் சுடுகிற மயக்கம் - என்
விடுகதை இரவு விடிவதை மறக்கும்
போர்க்கள பூமி வீசியெறிந்த
பூக்களில் ஒன்று பேசியதின்று
உனை சாய்த்த பள்ளங்களை
நிறைவாக மூடுகிறேன் - நீ
என் மனதோரம் நடந்துவர
ஒருவழிச்சாலை போடுகிறேன்
உயிரின் கனிகள் உனதடி - உன்
கண்ணீர் துளிகள் எனதடி
சரணம் 1
மாயப் பெண்மையே தேடித் தேடி உனை
தீயில் தள்ளியே மறைந்தேனே
கண்கள் கண்டதொரு ஈரக்காட்சியால்
மண்டை நரம்புகள் நனைந்தேனே
அகதிக்கூடாரம் கடந்துவந்து என்
சகதி மனவெளியில் விழுந்தாயே
சகதி மனவெளியைப் புல்வெளியாக்கி
சிதறு பூக்களாய் நாடந்தாயே
ஈழ தேவதை வாழ வாழவே
தூய பாவங்கள் நான் புரிவேன்
விடியல் கீற்றினில் விசிறிகள் செய்து
அடிமைக் காயங்கள் ஆற்றிடுவேன்
உயிரின் கனிகள் உனதடி - உன்
கண்ணீர் துளிகள் எனதடி
சரணம் 2
பாவை முன்னேறும் பாதை எங்கிலும்
பாவி முட்களைப் பொழிந்தேனே
காலம் காணாத கவிதை ஒன்றை
கப்பல் செய்திட நினைந்தேனே
வான மாளிகை தானனுப்பிய
மொத்த கர்வமென மொழிந்தேனே - உன்
சின்ன குடிசையில் ஒளிந்து கிடக்கும்
யுத்த சத்தங்கள் அறியேனே
நானறியாமல் என் சிறுமீசை
உந்தன் வாசலில் மண்டியிடும்
எனை கேட்காமல் என் குடை இனிமேல்
உனையும் உனையும் உள்ளடக்கும்
உயிரின் கனிகள் உனதடி - உன்
கண்ணீர் துளிகள் எனதடி
பாடல் வரிகளுக்கான வீடியோ: