Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'கலகலப்பு 3' வருமா..? சுந்தர்.சி-யின் ஐடியா என்ன?
Recommended Video
சென்னை : சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த படம் 'கலகலப்பு 2'. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.
முதல் நாள் படத்திற்கு ஆவரேஜ் ஓப்பனிங் இருந்தாலும், அடுத்தடுத்த நாள் படத்தினை பார்க்க தியேட்டர்களுக்கு செம்ம கூட்டம் வந்துள்ளது.
இந்நிலையில், கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் தயாராகும் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
கலகலப்பு 2 வசூல்
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'கலகலப்பு 2' திரைப்படம் மூன்று நாட்கள் முடிவில் தமிழகம் முழுவதும் சுமார் ரூ. 9 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் ரூ 13 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இரண்டாம் பாகம்
விமல், சிவா, சந்தானம் நடித்த 'கலகலப்பு' படம் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து 'கலகலப்பு 2' படத்தை இயக்கத் திட்டமிட்டார் சுந்தர்.சி. ஆனால் அதை செயல்படுத்த இத்தனை காலமாகிவிட்டது.
படக்குழுவினர் மகிழ்ச்சி
கடந்தவாரம் வெளியான 'கலகலப்பு 2' படம் வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் இயக்குனர் சுந்தர்.சி உட்பட படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஒரு தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் 'கலகலப்பு 2' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் சுந்தர்.சி.
அடுத்த பாகம் வரும்
அப்போது அவர் பேசும்போது, இந்தப் படத்தின் மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்று கலகலப்புகள் தொடரும் என்று கூறினார். 'கலகலப்பு 2' படம் வணிக ரீதியில் வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் விரைவில் அடுத்த பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் சுந்தர்.சி.