Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
களவாணி தலைப்புக்காக மோதிக் கொள்ளும் இயக்குநர் தயாரிப்பாளர்!
2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் ஏ சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'களவாணி' திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சுரேஷ் இயக்கத்தில் விமல் நடித்த 'எத்தன்' படத்தைத் தயாரித்து வெளியிட்டது இந்த நிறுவனம்.
தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் 'வதம்' படத்தைத் தயாரித்து வருகிறது. மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் அதே களவாணி டீமை வைத்து களவாணி 2 படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார் சற்குணம். அந்தப் படத்துக்கு கே 2 என்று தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக்கையும் சிவகார்த்திகேயனை வைத்து வெளியிட்டார். விமல், ஓவியா நடிக்கிறார்கள்.
உடனே அதற்கு எதிர்ப்பு காட்டும் விதத்தில் களவாணி 2 படத்தை தாங்களே தயாரிக்கப் போவதாக ஷெராலி பிலிம்ஸ் நசீர் அறிவித்துள்ளார். 'களவாணி 2' படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.