Don't Miss!
- News கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த சீசன் எப்படி இருக்கு...பார்வையாளர்களிடம் கருத்து கேட்ட கமல்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஏழாவது வாரத்தின் இறுதிப்பகுதியை எட்டி உள்ளது. இந்த வாரம் வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 100 நாட்களை கொண்ட இந்த நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை நெருங்கி வருகிறது.
பாலா இயக்கத்தில் ரெட்டை வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த வார தலைவராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வாரத்தில் பாத்ரூம் ஏரியா ஆளுமை வருணுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிரூப் தினம் ஒருவருடன் சண்டை போடுவதை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி போகி உள்ளனர்.
இந்த வார எவிக்ஷன்
இந்த வாரம் அபினய், அக்ஷரா, சிபி, இமான் அண்ணாச்சி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, நிரூப், பாவனி, தாமரை ஆகிய ஒன்பது பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மக்களின் குறைவான ஓட்டுக்களைப் பெற்று இசைவாணி தான் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அபிஷேக்கின் ரீஎன்ட்ரி
இந்த வாரம் நடைபெற்ற பிரச்சனைகள், சண்டைகள் குறித்து வார இறுதி எபிசோட்டின் முதல் நாளான இன்று கமல் பேச உள்ளார். ஹவுஸ்மேட்கள் இடையே உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க உள்ளார். இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் ப்ரோமோவில் வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் அபிஷேக் ராஜா, பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்.
அன்பை பொழியும் பிரியங்கா
அபிஷேக்கை பார்த்த பிரியங்கா, ராஜு, நிரூப், தாமரை போன்றோர் சென்று கட்டிப்பிடித்து அன்பை பொழிகிறார்கள். அப்போது ராஜு, நேற்று தான் உன் ஃபிரண்ட் உடன் க்ளோஸ் ஆனேன். நேற்று இரவு தான் பேசி சமாதானம் ஆனோம். அதற்குள் வந்து விட்டாய் என்கிறார் அபிஷேக்கிடம். இதை கேட்டு மற்றவர்கள் சிரித்து கிண்டல் செய்கிறார்கள். பிரியங்கா, ராஜுவை கட்டிப்பிடித்து சமாதானம் ஆகிறார்.
இந்த சீசன் எப்படி இருக்கு
இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் கமல், இந்த நிகழ்ச்சி 50 வது நாளை நெருங்கி உள்ளது. உங்களின் கணிப்பில் இந்த சீசன் எப்படி இருக்கிறது என பார்வையாளர்களை பார்த்து கேட்கிறார். அதற்கு ஒருவர், ராஜு டஃப் கன்டஸ்டன்ட்டாக இருக்கிறார் என்கிறார். மற்றொருவர் ஆண்கள் எல்லோருமே கடும் போட்டியாளர்களாக உள்ளனர் என்கிறார்.
அபிஷேக் இல்லாத பிரியங்கா
மற்றொருவர், அபிஷேக் வருவதற்கு முன்பிருந்த பிரியங்கா நன்றாக விளையாடினார் என்கிறார். அதற்கு கமல், அவர் வந்து இப்போது தானே ஒரு நாள் ஆகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என முடிக்கிறார் கமல். வீட்டிற்குள் அபிஷேக்கை கட்டிப்பிடித்து சிரிக்கிறார் பிரியங்கா.
அபிஷேக்கை வெறுக்கும் ரசிகர்கள்
இதை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் 3 வனிதா ரீஎன்ட்ரி. பிக்பாஸ் 5 அபிஷேக் ரீஎன்ட்ரி. வேற யாரையாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக கொண்டு வந்திருக்கலாம். அபிஷேக் எரிச்சலடைய வைக்கும் நபர் என அபிஷேக் ராஜாவின் வைல்ட்கார்டு என்ட்ரிக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video
கலாய்த்த நெட்டிசன்கள்
அதே சமயம், எத்தனை நாளைக்கு தான் பிக்பாசே கன்டென்ட் கொடுத்துட்டு இருப்பார். அது தான் கன்டென்ட் புக்கையே உள்ளே அனுப்பி வைத்து விட்டார் என கலாய்த்து வருகின்றனர். அபிஷேக் வரதுக்கு முன்னாடி பிரியங்காவின் கேம் நன்றாக இருந்தது. இனி அவரின் கேம் கண்டிப்பா மாறும். 50 நாட்கள் முடிவடைந்து விட்டது. ஆனால் இந்த சீசன் சிம்ப்ளி வேஸ்ட் என ஏராளமானோர் தெரிவித்துள்ளனர்.
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
-
சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு