Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குண்டர் சட்டத்தில் உள்ள போக வேண்டியவங்க நம்ம மேல அதை பாய்ச்சுகிறார்கள்: கமல் ஆவேசம்
சென்னை: குண்டர் சட்டத்தில் உள்ள போக வேண்டியவங்க எல்லாம் வெளிய நம்ம மேல அதை பாச்சிக்கிட்டு இருக்காங்களே என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொந்தளித்தார் கமல்.
கமல் ஹாஸன் ட்விட்டர் மூலம் மட்டுமே அரசியல் பேசுகிறார் என்று ஆளாளுக்கு கிண்டல் செய்கிறார்கள். இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேசியுள்ளார்.
ஜூலி தனது அனுபவங்களை கமலிடம் கூற அங்கு ஆரம்பமானது அரசியல் பேச்சு.
ஜூலி
எங்க வீட்டு பெண்ணாக நினைத்து அனுப்பினால் இப்படி பொய் சொல்லிட்டியேம்மா என்று அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள் என்று ஜூலி கமலிடம் தெரிவித்தார்.
குணாதிசயங்கள்
உங்களின் குணாதிசயங்கள் எல்லாம் பார்வையாளர்களுக்குள்ளும் உள்ளது. அதை குத்திக்காட்டியது மாதிரி கூட கோபம் வரலாம். அதையும் புரிந்து கொள்ளுங்கள் என்று ஜூலியிடம் கூறினார் கமல்.
அரசியல்வாதிகள்
ஜூலி மீது இவ்வளவு கோபப்பட வேண்டிய அவசியமே இல்லை. இதே ஜல்லிக்கட்டில் பார்த்த ஜூலி உங்களுடைய கதாநாயகி ஆக முடியும். ஒரு சின்ன பொய்க்காக கோபம் என்றால் அரசியல்வாதிகளை எல்லாம் ஏன் விட்டு வச்சீங்க என்று கமல் ஆக்ரோஷமாக கேட்டார்.
கோபம்
இவ்வளவு கோபம். ஒரு சின்ன பொண்ணு மேல காட்டுறீங்களே. குண்டர் சட்டத்தில் உள்ள போக வேண்டியவங்க எல்லாம் வெளிய நம்ம மேல அதை பாச்சிக்கிட்டு இருக்காங்களே என்று கொந்தளித்தார் கமல்.
பாதுகாத்து வையுங்கள்
இந்த கோபத்தை பாதுகாத்து வையுங்கள். இது பாதுகாக்கப்பட வேண்டிய கோபம். அதை வெளிப்படுத்த வேண்டிய காலம் விரைவில் வரும். நான் இவங்களுக்கு பரிந்து பேசவில்லை. எதிர்த்து பேசுகிறேன். நீங்களும் நியாயமான நேரத்தில் எதிர்த்து பேச வேண்டும் என்றார் கமல்.
வீணாக்க வேண்டாம்
கோபத்தை பாதுகாத்து வையுங்கள். ஜூலி, காயத்ரி மீது காண்பித்து வீணடிக்க வேண்டாம். சரியான நேரத்தில் கோபத்தை காண்பியுங்கள். பல ஓட்டை போட்ட ஷவர் பாத் மாதிரி இருக்கக் கூடாது. அடிச்சா தீயணைக்கும் ஜெட்டாக மாற வேண்டும் என கமல் தெரிவித்தார்.
தைரியம்
இது மேடை கிடைத்ததால் சொல்லும் அறிவுரை இல்லை. அறிவரை தான். எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் அறிவுரை. எனக்கு நான் சொல்லிக் கொள்ளும் தைரியம். எனக்கு அது நிறைய தேவைப்படுகிறது. அதற்கு உங்களின் கோபம் தான் ஃபியூயல் ஆகும் என்று கமல் கூறினார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்