Don't Miss!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அம்பேத்கர் கடிதம் என் கண்களை கலங்கடித்தது.. கண்ணீர் விட்ட கமல்.. என்ன பண்ணாரு தெரியுமா?
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் அவர்கள் சொந்தங்களுக்கு கடிதம் எழுதி படித்த நிலையில், விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த காட்சி 24 மணி நேர எபிசோடில் நீக்கப்பட்ட நிலையில், பெரிய சர்ச்சை வெடித்தது. அதன் பின்னர் அந்த காட்சி ஒரு மணி நேர எபிசோடில் ஒளிபரப்பாகி ரசிகர்களை அமைதியுற செய்தது.
பிக் பாஸ் வீட்டில் ஒலித்த ஜெய்பீம் என ரசிகர்கள் விக்ரமன் எழுதிய கடிதத்தை கொண்டாடிய நிலையில், ஞாயிறு எபிசோடில் கமல்ஹாசன் அந்த கடிதம் தன்னை கலங்க செய்தது என பேசி விக்ரமனை வெகுவாக பாராட்டினார்.
Bigg Boss Tamil 6: அடேங்கப்பா.. தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?
அம்பேத்கருக்கு கடிதம்
இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் அவர்கள் சொந்தங்களுக்கு கடிதம் எழுதி படித்த நிலையில், விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். அம்பேத்கர் லண்டனில் பட்ட கஷ்டங்களை குறிப்பிட்டு இருந்த விக்ரமன் அவரை போல தன்னால் ஆக முடியாது என்று தெரியவில்லை ஆனால், கொஞ்சமாச்சும் மாற முயற்சிப்பேன் என எழுதியது ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது.
கிளம்பிய சர்ச்சை
விக்ரமன் கடிதம் எழுதும் போது அவர் அம்பேத்கருக்கு கடிதம் எழுதுகிறார் என்பது கேமராவில் பதிவான உடன் அதன் பின்னர் அந்த கடிதம் பற்றிய காட்சிகளை 24 மணி நேர எபிசோடில் காட்டவில்லை என ரசிகர்கள் பெரிய சர்ச்சையை கிளப்பினர். அதன் பின்னர் ஒரு மணி நேர எபிசோடில் அந்த கடிதம் இடம்பெற்றிருந்தது.
கலங்கிய கமல்
ஒவ்வொரு போட்டியாளர்களாக அவர்கள் எழுதிய கடிதம் பற்றி பேசி முடித்த நிலையில், கடைசியாக விக்ரமன் தான் அம்பேத்கருக்கு எழுதிய கடிதம் பற்றி பேசினார். அதை கேட்ட கமல் அந்த கடிதத்தை நீங்க வாசிக்க கேட்டதும் நான் கலங்கிட்டேன் என்றும் பெரிய தகப்பன் அம்பேத்கர் என்றும் பேசி பிக் பாஸ் மேடையிலே கண்கள் கலங்கிய நிலையில் கமல் பேசியது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
காந்திக்கு கடிதம்
அம்பேத்கர் பற்றிய பல விஷயங்களை எடுத்து சொன்ன கமல் அதன் பின்னர் நானும் ஒருத்தருக்கு இதுபோல கடிதம் எழுதினேன் என மோகன் என்பவருக்கு எழுதிய கடிதத்தை படித்துக் காட்டிய கமல் கடைசியில் அந்த மோகன் தான் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்றதும் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கைதட்டினர். இந்த கடிதத்தின் விளைவு தான் ஹேராம் படம் எடுக்கவே தன்னை உந்தியதாகவும் கமல் பேசினார்.