அது ச்சும்மா... தமாசுக்கு போட்டது... ஆனா தமிழ்நாட்டுக்கு தண்ணி வேணும்! - கமல்
Recommended Video

சென்னை: கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டால் துணைவேந்தர் வந்திருக்கிறார் என்ற தனது விமர்சனத்துக்கு விளக்கம் வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கமல்ஹாசன் ட்விட்டரில் மேற்கூறிய கருத்தை தெரிவித்திருந்தார்.

பின்னர் மற்றொரு ட்விட்டில், "ஒரு நகைச்சுவைக்காக அப்படிக் குறிப்பிட்டேன். உண்மையில் கர்நாடகத்தைச் சேர்ந்த நாகேஷ் என் குருக்களில் ஒருவர், என் நண்பர்கள் திரு ராஜ்குமார், திருமதி சரோஜாதேவி, திரு ரஜினிகாந்த் மற்றும் திரு அம்பரீஷ் போன்றவர்கள் என் சொந்தங்கள். மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கை குறித்த என் நகைச்சுவை அது. துணைவேந்தர் மீதான சாடல் அல்ல. எப்படியிருந்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் தேவை," என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











