Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிரதாப் போத்தனின் நினைவு எங்களுடன் என்றும் இருக்கும்.. கமல்ஹாசன் கண்ணீர் மல்க அஞ்சலி!
சென்னை : பிரதாப் போத்தனின் நினைவு எங்களுடன் என்றும் இருக்கும் என்ற நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video
நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதாப் போத்தன் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஓவியா ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. மீண்டும் சின்னத்திரைக்கு வராங்க.. என்ன நிகழ்ச்சி தெரியுமா?
பிரதாப் போத்தன்
நடிகர் பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து,இவர்கள் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து, 1990-ம் ஆண்டு அமலா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கேயா போத்தன் என்கிற மகளும் உண்டு. 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.
நேரில் அஞ்சலி
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனியே வசித்து வரும் பிரதாப் போத்தன். இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதாப் பேத்தன் இறந்த செய்தியை கேள்விபட்ட மணிரத்னம் முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், பிசி ஸ்ரீராம், ராஜீவ் மேனன், நடிகை கனிகா, நடிகை பூர்ணிமா,ஒய்ஜி மகேந்திரன், கருணாஸ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கமல் அஞ்சலி
இதையடுத்து, மறைந்த நடிகர் இயக்குனர் பிரதாப் போத்தன் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் பிரதாப் போத்தனை அவரது அண்ணன் ஹரி மூலமாகத்தான் தனக்கு தெரியும். அப்போது பிரதாப் பேத்தன் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். மிகத் திறமையான நடிகர். அதை பார்த்து நானும், அனந்துவும் இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் சினிமா வாய்ப்பு கேட்டோம். அதன் பிறகு திரைப்படங்களில் நடித்து வந்தார் என்று தெரிவித்தார்.
முழு திறமையும் வெளிவராமல்
மிகச் சிறந்த எழுத்தாளர், நடிகர் பிரதாப் போத்தன். அவருடைய முழு திறமையும் வெளிவராமல் போனது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது. பிரதாப் போத்தனின் நினைவு எங்களுடன் என்றும் இருக்கும் என்றும் நடிகர் கமல்ஹாசன் பேசினார். அதேபோல இயக்குநர் மணிரத்னமும், பிரதாப் போத்தன் என்னுடைய நீண்டநாள் நண்பர் நல்ல திறமைசாலி இவருடைய இழப்பு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறியிருந்தார்.