நான் கஷ்டப்பட்டு பண்றத ரஜினி அசால்டா பண்ணிடுவாரு...ரஜினியை ஓப்பனாக பாராட்டிய கமல்
சென்னை : ரஜினி - கமலை போட்டியாக ரசிகர்கள் நினைத்து வருவது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. ஆனாலும் அவர்கள் நல்ல நண்பர்கள் என்பதை பலமுறை மேடைகளிலும், பேட்டிகளிலும், சோஷியல் மீடியாவிலும் குறிப்பிட்டுள்ளனர்.
Recommended Video
இருந்தாலும் ரசிகர்கள் இடையேயான போட்டி பல ஆண்டுகள் ஆன பிறகும் தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்ட சமயத்தில் கமலிடம் எடுக்கப்பட்ட பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
அந்த பேட்டியில் ரஜினி பற்றியும், தங்கள் இருவருக்கும் இடையேயான நட்பு பற்றியும் கமல் ஓப்பனாக பேசி உள்ளது பற்றி கமெண்ட்கள், லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த பேட்டியின் முழு விபரம் இதோ...

ரஜினியை பாராட்டிய கமல்
நிருபர் : உங்கள் நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. உங்களுடைய வாழ்த்து செய்தியில், திரையில் தோன்றினாலே ரசிகர்களை வென்றெடுத்திட முடியும் என்பதை நிரூபித்து காட்டிய ரஜினிக்கு இந்த விருது 100 சதவீதம் பொருந்தும் என குறிப்பிட்டிருந்தீர்கள். இது நிஜமாகவே பாராட்டு தானா?
கமல் : அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?
நிருபர் : விமர்சனம் சார்ந்த பாராட்டா?
கமல் : இல்லை...இல்லை. விமர்சனம் என்ன இருக்கு அதுல.திரையில் தோன்றினாலே என்றால்...எத்தனை பேர் அதை செய்து விட முடியும்? திரையில் தோன்றினாலே அவரை ரசிக்கிறார்கள் என்பது அவரது பர்ஸனாலிட்டி பற்றிய பாராட்டு தானே.

கமல் அளவிற்கு ரஜினி இல்லை
நிருபர் : கமல்ஹாசன் அளவிற்கு ரஜினியிடம் மெனக்கெடல் இல்லை என புரிந்து கொள்ளலாமா?
கமல் : அதை நீங்க புரிஞ்சுக்கிட்டீங்கன்னா நான் என்ன பண்ண முடியும்? இந்த மாதிரி ஆளே இல்லை என்றேன் நான். ஆமாம். அப்படியும் புரிந்து கொள்ளுங்களேன். நான் இவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணுறது. அவர் அப்படி வந்து நின்னாலே நடக்குது என்பதில் என்ன தவறாக இருக்க முடியும்?
நிருபர் :கமல்ஹாசனுக்கு கொடுத்திருக்கனும். ரஜினிக்கு முன்பே கமலுக்கு தாதா சாகிப் பால்கே விருது கொடுத்திருக்க வேண்டும் என்ற வாதம் சமூக வலைதளங்கள் முன் வைக்கப்படுகிறது.அப்படி ஏதாவது எண்ணம் உங்களுக்கு உள்ளதா?

விருது வாங்கினால் தான் திறமையா
கமல் : அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. தாதா சாகிப் பால்கே வாங்கினால் தான் திறமை இருக்கு என்பதில்லை. ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே கொடுக்கவில்லை என்றால் அவருடைய பெருமை எந்த விதத்தில் குறைகிறது?
நிருபர் : அப்போ சர்ச்சையே வராது
கமல் : இல்லை...இல்லை.
நிருபர் : கமலுக்கு கொடுக்காமல் ரஜினிக்கு கொடுக்கிறார்கள் என்பது தானே சர்ச்சையாகிறது.

எங்களை வைத்து விளையாடுறது மீடியாவுக்கு பிடிக்கும்
கமல் : எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. பத்மஸ்ரீ விருது எனக்கு கொடுத்தார்கள். என்னை விட தகுதியானவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அந்த வருடம் அவங்களுக்கு கிடைக்கல அவ்வளவு தான். இந்த பாராட்டுக்கே தகுதியானவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ரஜினி மட்டும் தானா? எங்க ரெண்டு பேரையும் விட்டுடுங்க. எங்க ரெண்டு பேரையும் வைத்து விளையாடுவது தான் மீடியாக்களுக்கு பிடிக்கும்.
நிருபர் : மீடியாக்களுக்கு எந்த நோக்களும் இல்லை. சமூக வலைதளங்களில் உங்கள் ரசிகர்கள், அவர்களின் ரசிகர்களுக்கு இடையேயான போட்டியாக உள்ளது.
கமல் : சமூக வலைதளமும் மீடியா என்று சொல்கிறேன் நான். அதை தான் குறிப்பிடுகிறேன் என்றார்.

நீங்க ஏன் சண்டை போடுறீங்க
இந்த வீடியோவை பகிர்ந்து, சமீபத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் சரியாக போகவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடித்த விக்ரம் படம் செம ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. இதற்காக ரஜினி என்ன சண்டையா போட்டார்? அவர்கள் மீண்டும் மீண்டும் தங்களின் நட்பை பலவிதங்களில் வெளிகாட்டி தான் வருகிறார்கள். நீங்க எல்லோரும் ஏன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று தான் தெரியவில்லை என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











