Just In
- 34 min ago
செம அதிர்ஷ்டம்.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் ஹீரோயின்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- 1 hr ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 1 hr ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 2 hrs ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
Don't Miss!
- News
புதுச்சேரி காங். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்
- Lifestyle
கர்ப்பகாலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? எப்படி பாதுகாப்பா வைச்சுக்கணும் தெரியுமா?
- Sports
என்ன இது முட்டாள்தனம்.. கிரிக்கெட்டில் வரப் போகும் புதிய மாற்றம்.. பொங்கி எழுந்த முன்னாள் கேப்டன்!
- Finance
Budget 2021.. பட்ஜெட்டில் விவசாயிகளுக்களுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் சலுகைகள் அதிகரிக்கப்படலாம்!
- Automobiles
பிஎம்டபிள்யூ ஐ3 காரின் நிலைமை என்னவாக போகிறதோ! மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக பெறும் மின்சார கார்...
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரம்யாவுக்கு நோஸ் கட்.. அர்ச்சனாவுக்கு டோஸ்.. வளைச்சா? நிமிர்த்திடுவேன்.. நான் கேட்பேன்.. கமல் இடி!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் ஆரியை கார்னர் செய்தது பற்றி கமல் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சிரித்துக் கொண்டே ஆரியை போட்டுக் கொடுத்த ரம்யாவுக்கு நறுக்குன்னு ஒரு குட்டு வைத்தார் கமல்.
அதே போல ஓவர் ஆக்டிங் பண்ண அர்ச்சனாவுக்கு செம டோஸ். புரமோவை பார்த்தே ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் ஆனந்தமாகி விட்டனர்.

கமல் கச்சேரி
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கச்சேரி சிறப்பா இருக்கும் என்பதையே ஒவ்வொரு புரமோக்களும் தெளிவுபடுத்தி உள்ளன. முதல் புரமோவில் மக்களின் ஓட்டுக்கள் செய்த மாற்றம் என்றும், இரண்டாவது புரமோவில் அர்ச்சனாவுக்கு பேக்கப் என்றும், மூன்றாவது புரமோவில் ஆரியை கார்னர் பண்ண பஞ்சாயத்தையும் கையில் எடுத்துள்ளார்.

ஆரி விவகாரம்
நரிக்கூட்டத்தின் தலைவியாக அர்ச்சனா மாறி, ரம்யாவை அனிதாவை கூட்டு சேர்த்துக் கொண்டு ஆரியை ஒதுக்கிய விவகாரத்தை கையில் எடுத்து தனது சாட்டையை இந்த முறை இன்னும் வேகமாக சுழற்றி அடித்துள்ளார் கமல். சாஃப்ட்டா போட்டியாளர்களை தடவி கொடுக்கிறார் அர்ச்சனா மீது பயம் என்கிற விமர்சனங்களுக்கு பதிலடி கிடைத்துள்ளது.

இன்ஃபார்மர் ரம்யா
அர்ச்சனா, ரம்யா பிளான் பண்ணி தன்னை ஓரங்கட்டியது குறித்து ஆரி கமலிடம் விளக்கும் போது, இடையே புகுந்த ரம்யா பாண்டியன், அந்த டீமில் நீங்களும் தான் இருந்தீங்க என்றார். நான் அவர் கிட்ட பேசுறேன் என ஆரி முறைக்க, உடனே கமலிடம் சிரித்துக் கொண்டே ரம்யா ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன் என்றார்.

ரம்யாவுக்கு நோஸ் கட்
இன்ஃபார்மர் ரம்யா, கொஞ்சம் பாதிக்கப்பட்டவரையும் பேச விடுங்க என ரம்யாவுக்கு சரியான நோஸ் கட் கமல் கொடுத்ததாக பிக் பாஸ் எடிட்டர் புரமோவை சூடு பறக்க போட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார். இந்த முறையாவது நிகழ்ச்சியில் இதையெல்லாம் கட் செய்யாமல் காட்டுவார்களா?

அர்ச்சனாவுக்கு டோஸ்
அப்படி, இப்படி, அப்படி இப்படி என எஸ்.ஜே. சூர்யா மாதிரி பேசி மழுப்பிய அர்ச்சனாவுக்கு டோஸ் கொடுக்கும் விதமாக ஒரே போடாக கமல் போட்ட சாட்டையடியை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், மறுபடி மறுபடி புரமோவை போட்டு பார்த்து ஆனந்த கூத்தாடி வருகின்றனர். வெளியே போகும் போதும் பேச்சுக்கு ஒண்ணும் குறையில்லை என கழுவி ஊற்றி வருகின்றனர்.

நிமிர்த்திடுவேன்
மேலும், தனி நபர் செளகர்யத்துக்காக, (நீங்க சேஃபா பைனலுக்கு போகணும்னு) சட்டத்தை வளைக்க நினைச்சா, நிமிர்த்திடுவேன்.. நான் கேட்பேன் என அர்ச்சனாவுக்கு பொளேர் விட்டுள்ளார் கமல்ஹாசன். அப்பாடா ஒரு வழியா கமல் சார் அர்ச்சனாவுக்கு பயப்படாமல் பேசிட்டார் என பிக் பாஸ் ரசிகர்கள், பழைய கமல் சார் கம்பேக் என பாராட்டி வருகின்றனர்.

விஜய் டிவி ஆள் இல்லை
ஆஜீத், கேபி, ஷிவானி, சோமசேகரை விடவா அர்ச்சனா வீக்கான போட்டியாளர் என்கிற கேள்வியும். அவர் விஜய் டிவி ஆள் இல்லை, ஜீ தமிழ் அதனால் தான் சீக்கிரமா வெளியே அனுப்புறாங்க என்றும், அர்ச்சனா அழுத அழுகைக்கு அவர் வெளியேறுவதே சரி, இனி ரியோவும் சோமும் ஒழுங்கா கேம் ஆடுவாங்க என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

காலியான அன்பு பெட்
அன்பு பெட்டில் இருந்த நிஷா போன வாரம் வெளியேறிய நிலையில், அடுத்த வார தலைவர் பதவிக்கான போட்டியின் ஜெயித்து அடுத்த வாரமும் சேஃப் ஆகிட்டோம் கப் நமக்குத் தான் என ஏகப்பட்ட கனவுகளுடன் இருந்த அர்ச்சனாவை வெளியே அனுப்பி, அன்பு பெட்டை மொத்தமாக காலி செய்து விட்டாரே கமல் என்கிற வருத்தமும் எழுந்துள்ளது.