நள்ளிரவில் நடுத்தெருவில் இளம்நடிகையை கதறக் கதற அடித்த சீனியர் நடிகர்
மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை நடிகர் ஆதித்யா பஞ்சோலி தாக்கியதை நேரில் பார்த்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், அவரது அப்பா வயதான நடிகர் ஆதித்யா பஞ்சோலியும் ஒரு காலத்தில் காதலித்தது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கங்கனாவை காதலிக்கவில்லை, அவர் பைத்தியம் என்று ஆதித்யா தெரிவித்துள்ளார்.
ஆதித்யா தன்னை தாக்கியதாக கங்கனா கூற அதை ஆதித்யா மறுத்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து அந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியிருப்பதாவது,

ஹோட்டல்
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் நள்ளிரவு 12 மணி அளவில் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். அப்போது மும்பை ஜுஹு பகுதியில் உள்ள மாரியட் ஹோட்டலுக்கு வெளியே ரிக்ஷாவில் பெண் ஒருவர் கதறும் சப்தம் கேட்டது.

ரிக்ஷா
வேகமாக போங்க என்று அந்த பெண் ரிக்ஷா டிரைவரிடம் மீண்டும் மீண்டும் கூறினார். அப்போது ஒரு வெள்ளை நிற கார் வந்து ரிக்ஷாவை மறித்தது. ரிக்ஷாவில் இருந்தது கங்கனா என்பதை பார்த்தேன்.

உதவி
யாராவது உதவி செய்யுங்களேன் என்று கங்கனா கதறினார். காரில் இருந்து வந்த ஆதித்யா கங்கனாவின் முடியை பிடித்து இழுத்து அடித்தார். இதை பார்த்த நான் கங்கனாவை காப்பாற்ற சென்றேன்.

சொந்த விஷயம்
ஆதித்யாவை போய் பிடித்தேன். அவர் சர்தார்ஜி இந்து சொந்த விஷயம் தலையிடாதீங்க என்றார். சொந்த விஷயமாக இருந்தால் வீட்டிற்குள் வைத்து தீர்க்க வேண்டியது தானே என்றேன்.

தப்பினார்
அதற்குள் அங்கு 10 பேர் கூடி ஆதித்யாவை பிடித்தோம். அந்த நேரத்தில் கங்கனா அங்கிருந்து தப்பி சென்றார். கங்கனா மட்டும் ஆதித்யா மீது போலீசில் புகார் அளித்தால் சாட்சி சொல்ல நான் தயார் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications











