Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஃபேஸ்புக்கில் 'கன்னா பின்னா' என பெண் தேடும் நாயகன்!
திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான் செய்ய வேண்டும். அந்த அழகான பெண்கள் சென்னையில்தான் இருப்பார்கள் என திருச்சியிலிருந்து சென்னை வந்து அழகான பெண்களைத் தேடி அல்லோலப்படும் ஒரு இளைஞனின் கதையாக உருவாகிறது 'கன்னா பின்னா'.
மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ் பி மற்றும் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் இ சிவசுப்பிரமணியன் மற்றும் சீனிவாஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது.
இந்தப் படத்தின் இயக்குநர் தியா கதையை எழுதி, இயக்குவதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். நாயகியாக வன்மம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த 'அஞ்சலி ராவ்' நடித்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் தியா கூறுகையில், "படம் ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவையை மட்டும் நம்பி இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம். என் வாழ்க்கையில் என் நண்பர்கள் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை கற்பனை கலந்து கொடுத்து உள்ளோம். இதில் நிஜ பவுன்சர்கள் பலர் நடித்துள்ளனர்.
பார்ப்பதற்கு பிரமாண்டமான உருவத்தில் இருக்கும் இவர்கள் படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்திருப்பது பெரும் பலமாக இருந்தது.
இந்தப் படத்தின் கதையை நான் தயாரிப்பாளருக்கு கடைசி வரை சொல்லவே இல்லை. தயாரிப்பாளர்கள் எனக்கு நண்பர்களானதால் எதுவும் கேட்கவில்லை. படப்பிடிப்பு முடிந்தபிறகு தியேட்டரில்தான் படத்தைப் பார்த்தார்கள். மிக அருமையாக படம் வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. உங்கள் சிரிப்புக்கு நாங்கள் உத்திரவாதம்," என்றார்.
நாளைய இயக்குனர் குறும்பட நிகழ்ச்சியில் சிறந்த இயக்குநராக விருது பெற்றவர் தியா என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு இசையமைத்திருப்பவர் ரோஷன் சேதுராமன், ஒளிப்பதிவு ஜெரால்டு ராஜமாணிக்கம், பாடல்கள் ஸ்ரீதர் ராமசாமி, படத்தொகுப்பு வெஸ்லி, நடனம் நந்தா, சண்டைப் பயிற்சி ஜேசு, தயாரிப்பு நிர்வாகம் நாகராஜன்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தியா (Thiya).