Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சூரரைப்போற்று படத்திற்கு சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சி இருக்கனும்… மனதார புகழ்ந்த கன்னட நடிகர்
சென்னை : சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு ஆஸ்கார் விருது வழங்கி இருக்க வேண்டும் என கன்னட நடிகர் கிச்சா சுந்தீப் கூறியுள்ளார்.
அந்த படத்தில் பிழை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யா.
தோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது.. ஐசியூவில் உள்ளார்.. நடக்க 2 மாதங்கள் ஆகும்.. தாயார் கதறல்!
இந்த கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க முன்வந்ததற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும் என்று சூர்யாவை மனதார பாராட்டினார்.
சூரரைப்போற்று
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படமான இப்படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருப்பார்.
சூர்யான அழகான நடிப்பு
இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் இருந்தது. குறிப்பாக சூர்யா அம்மா ஊர்வசியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறும் காட்சி நெஞ்சை பதறவைத்தது. மேலும், விமான நிலையத்தில் பணம் கேட்டு அலைந்த காட்சி கண்ணீரை வரவைப்பதாக இருந்தன. இந்த படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறினர்.
இந்நிலையில், கன்னடி நடிகர் கிச்சா சுதீப், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், சூரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பை வெகுவாக பாராட்டி உள்ளார்.
Recommended Video
சூர்யாவை பாராட்டினார்
இந்நிலையில் கன்னடி நடிகர் கிச்சா சுதீப், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் , சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்தேன். சூர்யாவின் நடிப்பு மிகவும் மெச்சும்படி இருந்தது, சூர்யாவுக்கு ஆஸ்கார் விருது வழங்கி இருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுக்கு சூர்யா தகுதியானவர். அந்த படத்தில் பிழை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தில் நடிக்க சூர்யா முன்வந்ததற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும் என்று கன்னட நடிகர் சுதீப், சூர்யாவை மனதார பாராட்டினார்.
வில்லனாக நடித்தார்
கன்னட நடிகர் கிச்சா சுதீப் நானியின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நான் ஈ திரைப்படத்திலும், விஜய்யின் புலி படத்திலும் வில்லனான நடித்தவர் கிச்சா சுதீப்.இவர் கன்னடத் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவார்.