Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'என்னை அறிந்தால்' படத்தை திரையிடும் தியேட்டர்களை கொளுத்துவேன்: கன்னட நடிகர் ஆவேசம்
பெங்களூரு: அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை திரையிடும் தியேட்டர்களை தீ வைத்து கொளுத்திவிட்டு சிறைக்கு செல்ல தயார் என கன்னட நடிகர் ஜக்கேஷ் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஹிட் படமான என்னை அறிந்தால் சத்யதேவ் ஐபிஎஸ் என்ற பெயரில் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு இன்று கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளதற்கு கன்னட திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜக்கேஷ்
டப் செய்யப்பட்ட அஜீத்தின் படத்தை கர்நாடகாவில் வெளியிட்டால் அந்த படம் ஓடும் தியேட்டர்களுக்கு தீ வைத்துவிட்டு சிறைக்கு செல்லவும் தயார் என்று கன்னட நடிகரும், அரசியல்வாதிகயுமான ஜக்கேஷ் தெரிவித்துள்ளார்.
வாட்டாள் நாகராஜ்
பிற மொழி படங்களை தமிழில் டப் செய்வதை கண்டித்து வரும் வாரம் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக கன்னட சலுவாளிக் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
சிவராஜ்குமார்
கன்னட திரையுலகின் முன்னணி ஹீரோவான சிவராஜ் குமாரும் டப்பிங் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டப்பிங் படங்களுக்கு எதிராக போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரிலீஸ்
கடும் எதிர்ப்புக்கு இடையே சத்யதேவ் ஐபிஎஸ் படம் இன்று கர்நாடகாவில் ரிலீஸாகியுள்ளது. எதிர்ப்பு காரணமாக பெங்களூரில் மட்டும் படத்தை ரிலீஸ் செய்யவில்லை. ஆனால் தியேட்டர் பற்றாக்குறையால் பெங்களூரில் ரிலீஸ் செய்யவில்லை என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.