Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
குசும் மீண்டும் கைது!!
கன்னட பிரசாத் காதலி குசும் விபச்சார வழக்கில் கைது
Click here for more images |
தென் மாநிலங்களில் நடிகைகள், டிவி நடிகைகள் உள்ளிட்ட பெண்களின் மாபெரும் நெட்வோர்க்கை வைத்துக் கொண்டு மிகப் பெரிய விபச்சார புரோக்கராக செயல்பட்டு வந்தவர் கன்னட பிரசாத்.
பல ஆண்டுகளாக தனது செல்வாக்கால் தப்பி வந்த பிரசாத் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
அவரது காதலியான குசும் மற்றும் உதவியாளர்கள் பாரதிகண்ணன், குமார், சரவணன் ஆகியோர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் குசும் தான் பிரசாத்தின் வலதுகரமாக செயல்பட்டு வந்தார் என்பது உறுதியானது. பல தொழிலதிபர்களுடன் குசும் உல்லாசத்தில் இருந்த படங்களும் பிடிபட்டன.
கன்னட பிரசாத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால், குசும் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார்.
கன்னட பிரசாத்துடன் சேர்ந்து பிடிபடுவதற்கு முன் ஆலந்தூரில் கார் ஒன்றில் விபசாரம் செய்தபோது குசும் சிக்கினார்.
அது தொடர்பாக குசும் மீது விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார் தனி வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால், அந்த வழக்கில் குசும் கைதாகவில்லை.
இந் நிலையில் பிரசாத்துடன் சேர்ந்து கைதாகி ஜாமீனில் வெளியே வந்துவிட்ட குசும் விபச்சார வழக்கில் கைதாகாமல் தப்ப தலைமறைவானார்.
அவரை போலீசார் தேடி வந்தனர். இந் நிலையில் புழல் சிறையில் இருக்கும் கன்னட பிரசாத்தை சந்திக்க குசும் அங்கு வர இருப்பதாக
விபசார தடுப்புப்பிரிவுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் இன்று குசுமை கைது செய்தனர். சிந்தாதரிப்பேட்டையில் உள்ள விபசாரத் தடுப்பு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இன்றே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.