Don't Miss!
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Finance
budget 2023: தொடரும் நம்பிக்கை..சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!
- News
எங்கள் தரப்பில் வேட்பாளர் தயார்.. பாஜக நிலைப்பாட்டுக்கு காத்திருக்கிறோம்..ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கொழுப்பை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி… அழகுக்காக கன்னட நடிகை எடுத்த முயற்சி மரணத்தில் முடிந்த பரிதாபம்
பெங்களூர் : பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட கன்னட தொலைக்காட்சி நடிகை திடீரென உயிரிழந்துள்ளார். இது கன்னட திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரைப்பிரபலங்கள் பலரும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்றாகும்.
சமீபத்தில் நடிகை ரைசா வில்சன் முக அழகுக்காக சிகிச்சை மேற்கொண்டார். அதில் ஏதோ குளறுபடி ஆகி, முகம் வீங்கி காணப்பட்டது சர்ச்சையான நிலையில், கன்னட நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதால் உயிரிழந்துள்ளது பலருக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்க
அப்பா
காலும்
அப்படித்தான்
இருக்கும்..
கதை
கேட்டதுமே
கதறி
அழுதுட்டேன்..
டான்
அம்மா
நெகிழ்ச்சி!

கன்னட நடிகை சேத்தனா ராஜ்.
21 வயதே ஆன நடிகை சேத்தனா ராஜ் கன்னட தொலைக்காட்சி கீதா, டோரேசனி போன்ற கன்னட சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவருக்கு 21 வயதுதான் என்ற போதும் உடல் எடை கூடி காணப்பட்டார். உடல் எடையை குறைக்க எண்ணிய சேத்தனா ராஜ் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதற்காக நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுயநினைவை இழந்தார்
அவருக்கு, உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் அறுவை சிகிச்சை நேற்று மதியம் செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் போது, நடிகை சேத்தனா சுயநினைவை இழந்தார். இதனால், பதற்றம் அடைந்த மருத்துவர்கள் அவரை அருகில் உள்ள வேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தார். இதையடுத்து, நடிகை சேத்தனா ராஜ் உயிரிழந்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்
நடிகை சேத்தனா பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து தனது பெற்றோருக்கு எந்த தகவலையும் தெரிவிக்காமல் தனது நண்பர்களுடன் மருத்துவமனைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. நடிகை சேத்தனாவின் உடல் தனியார் மருத்துவமனையிலிருந்து, பிரேத பரிசோதனைக்காக ராமையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நடிகை சேத்தனாவின் பெற்றோர் மகளின் மரணத்திற்கு மருத்துவரின் அலட்சியமே காரணம் என்று அருகில் உள்ள காவல்நிலையத்தில் மருத்துவமனை குழுவின் மீது புகார் அளித்துள்ளனர்.

மரணத்திற்கு என்ன காரணம்
உடலை அழகுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரியால் வெறும் 21வயதே ஆன நடிகை உயிரிழந்துள்ளது பெங்களூரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நடிகை இழப்புக்கு என்ன காரணம் என்றும், அந்த நடிகைக்கு என்ன சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த தனியார் மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இளம் நடிகையின் மரணம் கன்னட திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.