Don't Miss!
- News அள்ள அள்ள தங்கம்.. பளபளன்னு ஜொலித்த நகைகள்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அடக்கடவுளே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
25வது நாளில் 200 கோடி வசூல்… பாக்ஸ் ஆபிஸில் கேஜிஎஃப் படத்துக்கு தண்ணி காட்டிய காந்தாரா…
பெங்களூரு: கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ள 'காந்தாரா' திரைப்படம், கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஜோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா படமாக வெளியான 'காந்தாரா' ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரையரங்குகளில் 25 நாட்களை கடந்துள்ள காந்தாரா படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லூசியா.. கேஜிஎஃப்.. காந்தாரா.. சத்தமே இல்லாமல் சாதிக்கும் சான்டல்வுட்.. சாத்தியமானது எப்படி?
மிரட்டும் காந்தாரா
ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ள 'காந்தாரா' திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குநராக மட்டும் இல்லாமல் ரிஷப் ஷெட்டியே ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா, பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. யாருமே எதிர்பார்க்காத வகையில் 'காந்தாரா' படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் படமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு, மேக்கிங், சினிமோட்டோகிராபி, இசை உட்பட டெக்னிக்கலாகவும் 'காந்தாரா' படத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வெற்றிகரமான 25வது நாள்
செப்டம்பர் 30ம் தேதி வெளியான 'காந்தாரா' திரைப்படம் திரையரங்குகளில் 25 நாட்களை கடந்துள்ளது. தமிழில் பொன்னியின் செல்வன், தெலுங்கில் காட்ஃபாதர் என மெகா பட்ஜெட் படங்கள் வெளியான போதும், காந்தாரா படத்திற்கு ரசிகர்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கேஜிஎஃப்-க்குப் பிறகு அனைத்து மொழி ரசிகர்களிடம் காந்தாரா படத்திற்கு பயங்கரமான வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 25 நாட்களை கடந்த பின்னரும் தொடர்ந்து டிக்கெட் புக்கிங் அதகளம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
200 கோடி வசூல்
இதனிடையே, காந்தாரா இதுவரை 220 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் காந்தாரா படத்துக்கு இந்தளவு வசூல் கிடைக்கும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். காரணம், இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட்டே 16 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 200 கோடிக்கு மேல் வசூலித்த ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப், பொன்னியின் செல்வன் படங்களின் பட்ஜெட்டை ஒப்பிடும் போது காந்தாராவின் பட்ஜெட் ஒன்றுமே இல்லை என கூறலாம். 16 கோடி பட்ஜெட்டில் உருவான காந்தாரா, 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது பிரம்மாண்ட இயக்குநர்களையே தலைசுற்ற வைத்துள்ளது.
சர்ச்சைகளும் ஆதரவும்
காடுகளில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பின்னணியில் 'காந்தாரா' உருவாகியுள்ளது. அரசுக்கும் ஆதி குடிகளுக்கும் இடையேயான அதிகார மோதல், உரிமைகள் மீட்பு என்பது தான் காந்தாராவின் ஒருவரிக் கதை. ஆனால், இதில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் காந்தாரா ஒரு கலைப்படைப்பு என திரை விமர்சகர்கள் தங்களது கருத்துகளை முன் வைத்துள்ளனர். ஒருபக்கம் விமர்சனங்கள், இன்னொரு பக்கம் ரசிகர்களிடம் வரவேற்பு என காந்தாரா திரையுலகையே மிரட்டி வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி