Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அமைதியாகச் சொன்னாய் உன் காதலை...கபில் சிபலின் கலக்கல் பாட்டு!
தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பணியில் கடும் பிசியாக இருந்து வந்தபோதிலும் இந்திப் படத்துக்கும் அவர் பாடல் எழுத நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார். இயக்குநர் ஆதித்யா ஓம் என்பவரின் புதிய இந்திப் படமான பந்தூக் படத்தில்தான் சிபலின் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்படத்துக்கு பாடல் எழுத வேண்டும் என்று ஓம், சிபலை அணுகியபோது மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டாராம் சிபல். இதையடுத்து நான்கு பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார். அதில் ஒன்றைப் படத்தில் பயன்படுத்தியுள்ளார் ஓம்.
இரு காதலர்களின் பிரிவின் வலியை அழகான வார்த்தைகளில் காதல் ரசம் சொட்டச் சொட்ட வடித்துள்ளாராம் கபில் சிபல். உண்மையிலேயே இந்தப் பாடல் மிகவும் நயமாகவும், ரசணையாகவும் வந்திருப்பதாக இயக்குநர் ஓம் சிலாகித்துக் கூறுகிறார்.
இலக்கியத்தில் அவருக்கு உள்ள நல்ல ஞானமே இந்தப் பாடல் கவிநயத்துடன் மிளிர முக்கியக் காரணம் என்கிறார் ஓம். அந்தப் பாடலில் வரும் ஒரு வரியைப் பாருங்கள்...
காதல் மிளிரும் உன் கண்கள்
வெட்கம் பூத்த புன்னகை
அமைதியாகச் சொன்னாய் உன் காதலை...
இந்த மாதத்தில் இப்படம் திரைக்கு வருகிறதாம். 64 வயதாகும் கபில் சிபல், ஏற்கனவே 2 கவிதைப் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது பந்தூக் படத்தின் பாடல் ரிங்டோன்களாகவும் மாறி இந்திக்காரர்களை ரசிக்க வைத்து வருகிறதாம்.