Just In
- 47 min ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 1 hr ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 1 hr ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 1 hr ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்
- Automobiles
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
“ஒன்னு இங்க இருக்கு.. இன்னொன்னு எங்க?”-னு தேடினோம்ல... அதுக்கு விடை தெரியப் போகுது!
சென்னை: கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கங்கைஅமரன் முடிவு செய்துள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் கரகாட்டக்காரன். கங்கைஅமரன் இயக்கி இருந்த இப்படம் பட்டிதொட்டியெங்கும் வெற்றிநடைப் போட்டது. தில்லானா மோகனாம்பாளின் மாடர்ன் வெர்சன் தான் இப்படம் என்ற விமர்சனம் இருந்தாலும், கிராமத்து மணம் வீசிய இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா எனப் பலருக்கு இப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது.

வாழைப்பழ காமெடி:
இப்படத்தின் பாடல்களைப் போலவே காமெடியும் இன்றளவும் பிரபலம். அதிலும் குறிப்பாக அந்த வாழைப்பழ காமெடி மற்றும் சொப்பனசுந்தரி கார் காமெடியை இப்போதும் நெட்டிசன்கள் டிரெண்டிங்கில் வைத்துள்ளனர்.

2ம் பாகம்:
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கங்கை அமரன் திட்டமிட்டுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான கதை, திரைக்கதை கூட தயாராக இருக்கிறதாம். முதல்பாகத்தில் நடித்த நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேய்க்கதை:
முதல் பாகத்தில் காதல், கரகாட்டக்கலை, குடும்ப பாசம் பற்றிப் பேசியது கதைக்களம். இரண்டாம் பாகத்தில் அதோடு கூடுதலாக பேய் ஒன்றும் சேர்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரகாட்டக்குழு தங்க வைக்கப்படும் கட்டிடத்தில் கரகாட்டக்காரியின் ஆவி இருப்பதாகவும், அது செய்யும் அட்டகாசங்கள் தான் படத்தின் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

செந்தில் கவுண்டமணி ஜோடி:
இப்போதைய டிரெண்டிங்கிற்கு ஏற்ப படத்தில் பேயை சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. கரகாட்டக்காரன் 2 எடுக்கப்பட்டால் செந்தில் கவுண்டமணி ஜோடி மீண்டும் அதில் சேர்ந்து நடிப்பர் என பேட்டி ஒன்றில் கங்கை அமரன் தெரிவித்திருப்பதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.