Don't Miss!
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கணவரை பிரிந்த சீனியர் நடிகை இளம் ஹீரோவை காதலிப்பதை உளறிய இயக்குனர்
மும்பை: நடிகை மலாய்கா அரோராவும், நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிப்பதை இயக்குனர் கரண் ஜோஹார் உறுதி செய்துள்ளார்.
சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பிறகு நடிகை மலாய்கா அரோரா தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். அவரும், அவரை விட 12 வயது சிறியவரான நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக உள்ளது.
இந்த காதல் அர்ஜுன் கபூரின் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
அர்ஜுன்
மலாய்காவும், அர்ஜுனும் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள், பார்ட்டிகளுக்கு செல்கிறார்கள். அவர்கள் காதலிப்பது தெரிந்தும் அனைவரும் கிசுகிசுக்கிறார்களே தவிர அதை யாரும் வெளியே சொல்லவில்லை. காதல் விஷயத்தில் அர்ஜுன் தனது அப்பாவின் பேச்சை கேட்க தயாராக இல்லையாம்.
கரண்
அண்மையில் மலாய்கா அர்ஜுன் கபூருடன் வெளிநாட்டிற்கு சென்று வந்தார். டிவி நிகழ்ச்சியில் என்ன மலாய்கா வெளிநாட்டு போனீங்க போல, தனியாக போன மாதிரி தெரியலையே என்று கூறி அவரை பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் கலாய்த்தார். மலாய்காவும் சிரித்து மழுப்பினார். கரண் கலாய்த்தபோது மனிதருக்கு தில்லு தான் என்றார்கள் ரசிகர்கள்.
காபி வித் கரண்
காபி வித் கரண் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கலந்து கொண்டு கரண் ஜோஹார் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார்கள். ராகுலிடம் உங்களுக்கு யார் மீது அதிகம் ஈர்ப்பு இருந்தது என்று கேட்டதற்கு மலாய்கா அரோரா என்று பதில் அளித்தார் ராகுல்.
உறுதி
மலாய்கா மீது தற்போது ஈர்ப்பு இல்லை என்று ராகுல் கூறினார். இதை கேட்ட கரணோ, ஏன் மலாய்கா அர்ஜுனை காதலிப்பதால் ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டதா என்று ராகுலிடம் கேட்டார். இதன் மூலம் மலாய்கா, அர்ஜுன் காதலிப்பதை கரண் உறுதி செய்துள்ளார். முன்னதாக காபி வித் கரண் நிகழ்ச்சிக்கு வந்தபோது தான் ஒருவரை காதலிப்பதாக கூறிய அர்ஜுன் கபூர் அவரின் பெயரை தெரிவிக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.