Don't Miss!
- News ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அதுதாங்க சூப்பர் ஸ்டார் பவரு.. ரஜினிகாந்துக்கு குடை பிடித்த கர்நாடக அமைச்சர்.. டிரெண்டாகும் பிக்ஸ்!
பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக நேற்று கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த விருதை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.
கர்நாடக விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அந்த விழாவிற்கு ரஜினி வருகை தந்த போது அன்போடு கர்நாடக அமைச்சர் ரஜினிகாந்துக்கு குடை பிடித்து வந்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது: ரஜினி, Jr NTR கைகளால் விருது பெற்றார் அப்புவின்மனைவி!
ஸ்டைல் சாம்ராட்
70 வயதை கடந்த நிலையிலும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என ஸ்டைல் சாம்ராட்டாக தனி விமானம் மூலமாக பெங்களூருவுக்கு ரஜினிகாந்த் நேற்று பறந்து சென்றார். அவரை வரவேற்க கர்நாடகவின் முக்கிய அமைச்சர்கள் விமான நிலையத்திற்கே சென்று ராயல் வரவேற்பு அளித்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகின.
புனீத் ராஜ்குமாரை புகழ்ந்து
இளம் வயதிலேயே மறைந்து விட்ட அப்பு என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் புனீத் ராஜ்குமார் செய்த சாதனைகள் குறித்தும் அவரது நற்பண்புகள் குறித்தும் மேடையில் பேசிய ரஜினிகாந்த் தனது கரங்களால் கர்நாடக ரத்னா விருதை புனீத் ராஜ்குமார் சார்பாக அவரது மனைவி அஸ்வினிக்கு வழங்கினார்.
ஒற்றுமை முக்கியம்
கர்நாடக மக்களுக்கும் ராஜ்யோத்சவா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத, பேதம் இல்லாமல் மக்களுக்கு நிம்மதி, மகிழ்ச்சியை வழங்க வேண்டும் என்று தாய் புவனேஸ்வரி, அல்லா, இயேசுவிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என மக்கள் சாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார் ரஜினிகாந்த்.
ரஜினிக்கு குடை பிடித்த அமைச்சர்
கர்நாடகாவில் தோட்டக்கலை அமைச்சராக இருக்கும் முனிரத்னா நிகழ்ச்சியின் போது மழை பெய்ததால் நடிகர் ரஜினிகாந்துக்கு குடை பிடித்து சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. எங்க சூப்பர்ஸ்டார் பவரை பாருங்க என ரஜினி ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் அடைந்துள்ளனர்.
ரஜினியின் நண்பர்
பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை போலவே முனிரத்னாவும் ஆட்டோ டிரைவராக இருந்து அமைச்சரானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராக்லைன் நிறுவனம் தான் ரஜினி கலந்து கொள்ளும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட நிலையில், அமைச்சர் முனிரத்னா ரஜினிக்காக குடை பிடித்துச் சென்றா என்றும் லிங்கா ஆடியோ லாஞ்சுக்காக அவர் சென்னை வந்திருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கன்னட திரையுலகில் பல படங்களையும் முனிரத்னா தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.