கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடு…தியேட்டரில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி!
சென்னை : கர்நாடகாவில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு ஏப்ரல் 7ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மீண்டும் ஊரடங்கு?
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீண்டும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பெங்களுரில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 3500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இறப்பு விகிதம் அதிகரிப்பு
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே போன்று தென் மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வந்தது. அதே போல இறப்பு விகிதமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்
இந்நிலையில்,கர்நாடகாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்திருந்த நிலையில், கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்திருந்தது. இந்நிலையில் கர்நாடக அரசு மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புதிய உத்தரவு
கொரோனாவின் இரண்டாவது அலை வீரியம் மிக்கதாக இருப்பதால் அது 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களை அதிக அளவில் தாக்குகிறது. இதனால் திறக்கப்பட்ட பள்ளி , கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டு10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் படி வரும் 7ம் தேதி முதல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











