Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கிளாஸ்மேட் ஆல்பம்.. டீசர் வெளியிட்ட கார்த்தி.. பாராட்டிய எஸ்ஜே சூர்யா!
தனிநபர் இசை மற்றும் வீடியோ ஆல்பங்கள் உலகின் பல நாடுகளிலும் பிரபலமாக உள்ளன. ஆனால் இந்தியாவில் குறிப்பாக தென்னகத்தில் வெகு அரிதாகவே ஆல்பங்கள் வெளியாகின்றன.
அந்த வகையில் கிளாஸ்மேட் (glassmate) என்ற பெயரில் தனி தமிழ் ஆல்பம் விரைவில் வெளியாகிறது.
இதனை இசையமைத்து உருவாக்கியிருப்பவர் ஜெஃப்ரே ஜோனத்தன்.
இந்த ஆல்பம் குறித்து அவர் கூறுகையில், "தனிநபர் ஆல்பத்துக்கான வரவேற்பு உலக நாடுகளில் பிரபலமாக இருக்கும் போது ஏன் இந்தியாவில் மட்டும் இல்லை? என்ற கேள்வி என்னுள் எழுந்த போது தான் இந்த கிளாஸ்மேட் ஆல்பத்தை உருவாக்கினேன்.
மியுசிக்ஃபேக்ட்ரி நிறுவனத்தார் ஆஷிஷ் கோத்தாரி என்பவர் சோனி மியுசிக் நிறுவனத்துடன் இணைந்து, இந்த கிளாஸ்மேட் என்ற ஆல்பத்தை தயாரித்துள்ளார்.
இந்த ஆல்பத்தில் 'வரியா' என்ற பாடலின் டீசர் மட்டும் நேற்று திங்கட்கிழமை நடிகர் கார்த்தியால் வெளியிடப்பட்டது. இந்த பாடல் வரும் ஜூன் 25ம் தேதி முதல் இணையதளத்தில் (you tubeல்) வெளியாகிறது.
இந்த கிளாஸ்மேட் ஆல்பத்தைப் பார்த்த எஸ் ஜே சூரியாவும், இயக்குநர் பிரபு சாலமனும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இந்த பாடலில் பிரதாயினி என்ற மாடல் நடித்துள்ளார். சோனி நிறுவனம் வெளியிடும் முதல் சிங்கிள் டிராக் தமிழ் ஆல்பம் இது.
இந்த ஆல்பத்துக்கு 'விடியுமுன்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். புரட்சி நம்பி என்பவர் பாடலை எழுதியுள்ளார். இசான் வர்கீஸ் பாடியுள்ளார்.
இந்த பாடலை ஜெஃப்ரே ஜோனாத்தன் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் வீடியோ ஆல்பமாகவும் இயக்கியும் உள்ளார்.