Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கார்த்தியின் கொம்பனுக்கும் கிளம்பியது எதிர்ப்பு: தடை விதிக்கக் கோரி மனு
சென்னை: கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்சார் போர்டிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொம்பன். கிராமத்து கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்சார் போர்டிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் கே.சி. செல்வ குமார் கொம்பன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில், ஆப்பநாட்டு கொம்பன் என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிக்கப்பட்டு வருவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.
கார்த்தி
இந்த படத்தில் கலவரத்துக்கு முதுகுளத்தூர் பகுதியை கதைக்களமாகக் கொண்டு அதில் கதாநாயகன் ஆதிக்கவாசி போல் சித்தரிக்கப்பட்டுள்ளதும், அதனால் கொம்பன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
அச்சம்
இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பின்னணியில் உருவாகிவருவதால் அதனால் அந்த பகுதியில் ஒரு அசாதாரணமான சூழ்நிலை ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த திரைப்படம் தொடர்பாக நாடார் சமூக அமைப்பும் சென்சார் போர்ட்டில் மனு கொடுத்துள்ளது.
பிரச்சனை
இந்த படம் வெளிவரும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் இரு சமூகத்தினருக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்படலாம். எனவே, இந்த படத்தை வெளியிட அனுமதி வழங்கக்கூடாது என்று செல்வ குமார் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!