அராஜகத்தின் புதிய உச்சம்: கார்த்திக் சுப்புராஜே கொந்தளித்து விட்டார்.. காலா சத்தத்தையே காணோம்!
Recommended Video

சென்னை: நீட் தேர்வு மையங்கள் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நறுக்கென்று கேள்வி கேட்டுள்ளார்.
நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்களுக்கு வட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதிய அளவுக்கு இடம் இல்லை என்று கூறி வட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளனர்.
இதனால் மாணவர்களும், பெற்றோரும் அதிருப்தியில் உள்ளனர்.
BUT.. From 'Ban NEET in TN' to 'Conduct NEET in TN'... whattey game..
Do our voices really matter? — karthik subbaraj (@karthiksubbaraj) May 4, 2018 '>
ஒயின் ஷாப்
தெருவுக்கு தெரு ஒயின் ஷாப் திறக்க இடம் இருக்கும்போது தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த மட்டும் இடம் கிடைக்கவில்லையோ? அராஜகத்தின் புதிய உச்சகம்!! வன்மையாக கண்டிக்கிறேன். நீட்டை ரத்து செய்க என்பதில் இருந்து தமிழகத்தில் நீட்டை நடத்துக... என்ன ஒரு விளையாட்டு...நம் குரல் எடுபடுகிறதா? என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
உதவி
நீட் தேர்வு எழுத பிற மாநிலங்களுக்கு செல்லும் 20 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்பான்சர் செய்ய நான் மற்றும் ஆக்சஸ் பிலிம் தயார். தொடர்புக்கு - 9841777077 என்று நடிகர் அருள்நிதி ட்வீட்டியுள்ளார்.

நீட்
சும்மா சொல்லக் கூடாது மீம்ஸ் கிரியேட்டர்ஸ் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தான். என்னம்மா கேள்வி கேட்கிறார்கள்...

தமிழகம்
நீட் தேர்வை எதிர்த்து போராடிய தமிழக மக்களை தேர்வு மையத்திற்காக போராட வைத்துவிட்டது மத்திய அரசு.


Click it and Unblock the Notifications











