Don't Miss!
- Lifestyle ஒரு நிமிடத்திற்கு 13 முறைக்கு குறைவாக கண் சிமிட்டுறீங்களா? அப்ப இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு..
- News "சுயமரியாதை" தான் முக்கியம்.. பாஜகவில் எழுந்த குரல்.. குஜராத் எம்எல்ஏ திடீர் ராஜினாமா! என்ன நடந்தது
- Technology இப்படி இருந்தா விடுவமா.. கஸ்டமர்கள் கும்பிடு.. மாதம் ரூ.149 போதும்.. 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்!
- Finance பெங்களூர்: அடுத்த பத்தாண்டுக்குள் 40% மக்களுக்கு தண்ணீர் கிடைக்காதாம்!
- Sports குண்டைத் தூக்கிப் போட்ட பிசிசிஐ.. ஐபிஎல்-இல் டிஆர்எஸ் நீக்கம்.. இனி ரிவ்யூ கேட்டால் இதுதான் நடக்கும்
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
'பயமா... ஹாஹாஹா... தலைவர் ஃபேன்டா.. போங்கடா டேய்!' - கார்த்திக் சுப்பராஜ்
சென்னை: இறைவி படத்துக்காக தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் போடப்பட்டிருக்கிறது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு.
இந்த ரெட் காரணமாக அவர் தனுஷை வைத்து இயக்குவதாக இருந்த படம் ட்ராப் என்றும் சொல்லப்படுகிறது.
இறைவி படத்தில் ஏற்படும் நஷ்டத்தை கார்த்திக் சுப்பராஜ்தான் தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்ற புதிய நெருக்கடி வேறு.
ஆனால் இதற்கெல்லாம் கார்த்திக் சுப்பராஜ் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. அமைதி. பேரமைதி காத்து வந்தார்.
இப்போது அந்த அமைதியை உடைத்துக் கொண்டு தனது நிலை குறித்து ஒரு ஸ்டேடஸ் போட்டுள்ளார்.
அதில், "பயமா... ஹாஹாஹா... தலைவர் ஃபேன்-டா... போங்கடா டேய்!" என பொட்டிலடித்த மாதிரி சொல்லியிருக்கிறார், கபாலி பாடல்களை முன்வைத்து இப்படி ஒரு பதிவை கார்த்திக் சுப்பராஜ் போட்டிருந்தாலும், அவருக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து கவலை இல்லை என்பதாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.
தமிழில் படம் இயக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு கார்த்திக் சுப்பராஜ் வந்துவிட்டார். காரணம் ஏற்கெனவே தெலுங்கு, இந்தியில் அவருக்கு படம் பண்ணும் வாய்ப்புகள் வந்திருக்கின்றன.
இந்தி அல்லது தெலுங்கில் பெரிய அளவில் ஜெயித்து 30 கோடி சம்பளம் வாங்கும் இயக்குநரான பின் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தடையைத் தளர்த்தி வருந்தி வருந்தி அழைப்பார்களோ?